MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தையை அடிக்காம எப்படி ஒழுக்கமாக வளர்க்கலாம்? பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ்

குழந்தையை அடிக்காம எப்படி ஒழுக்கமாக வளர்க்கலாம்? பெற்றோருக்கு சூப்பர் டிப்ஸ்

அடிக்காமல், திட்டாமல் குழந்தைக்கு ஒழுக்கத்தை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பதற்கான பெற்றோருக்குரிய சில குறிப்புகள் இங்கே.

2 Min read
Kalai Selvi
Published : Apr 02 2025, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

How to Teach Discipline to Children Without Beating Them : குழந்தைகள் அடம்பிடித்தால், படிக்காமல் இருந்தால் அல்லது தவறாக நடந்துக் கொண்டால் சில பெற்றோர்கள் குழந்தைகளை கத்துகிறார்கள், அடிக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள். மேலும், குழந்தையை அடிக்காமல், திட்டாமல் அவர்களை ஒழுக்கமாக வளர்க்க முடியாது என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. பெற்றோர்கள் இப்படி நடந்து கொள்வது குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பெற்றோர்கள் இந்த பழக்கம் குழந்தைகளை இன்னும் மோசமாக்கும். எனவே, குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல் மற்றும் கத்தாமல் ஒழுக்கமாக வளர்ப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

26
குழந்தையிடம் பேசுங்கள்:

குழந்தையிடம் பேசுங்கள்:

குழந்தையின் சொல் பேச்சைக் கேட்காமல் இருந்தால் அவர்களிடம் கத்துவதற்கு பதிலாக பேசுங்கள். அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பொறுமையாக எடுத்து சொல்லுங்கள். நீங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பாக பேசும் விதம் அவர்களை மாற்றும்.

36
அடிக்காமல் இப்படி சொல்லுங்கள்:

அடிக்காமல் இப்படி சொல்லுங்கள்:

குழந்தைக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் போது அடிக்காமல், அவர்களின் மோசமான நடக்கையின் பின் விளைவுகளை எடுத்துச் சொல்லுங்கள். மேலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். இதனால் அவர்கள் மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க:  குழந்தைகளை பாதிக்கும் கோடைகால நோய்கள்-  எப்படி தடுக்கனும் தெரியுமா?

46
பெற்றோரின் நடத்தை:

பெற்றோரின் நடத்தை:

பாசம், ஒழுக்கம் என எதுவாக இருந்தாலும், எதுவும் அதிகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, குழந்தையை ஒழுங்குபடுத்தும் முன் முதலில் பெற்றோர்கள் தங்களது சொந்த நடத்தையை மாற்ற வேண்டும். ஏனெனில் குழந்தைகள் தங்களது பெற்றோர் பார்த்து தான் வளருகிறார்கள். 

இதையும் படிங்க:  குழந்தைகள் எதிர்காலத்தை பாதிக்கும் '4' விஷயங்கள் - சாணக்கியர் நீதி

56
குழந்தைகக்கு நேரம் ஒழுக்கங்கள்:

குழந்தைகக்கு நேரம் ஒழுக்கங்கள்:

பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக குழந்தைக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் குழந்தைக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வெறுப்பை உருவாக்கும்.  இது அவர்களை பெரும்பாலும் ஒழுங்கற்றவராக மாற்றும். எனவே, உங்கள் குழந்தைக்கு முடிந்தவரை நேரம் ஒதுக்குங்கள்.

66
குழந்தையின் வார்த்தையைக் கேளுங்கள்:

குழந்தையின் வார்த்தையைக் கேளுங்கள்:

பொதுவாக பெற்றோர்கள் குழந்தையின் பேச்சைக் கேட்பதில்லை.  ஆனால் பெற்றோரின் இந்த பழக்கம் தவறு. என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் நடத்தை மோசமாக மாற வாய்ப்பு உள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
பெற்றோர் குழந்தை உறவுகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved