MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாதுனு சொல்லுறாங்களே.. அது ஏன் தெரியுமா?

பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாதுனு சொல்லுறாங்களே.. அது ஏன் தெரியுமா?

சிறு குழந்தைகளை கண்டால் கண்டிப்பாக நாம் நம்மை அறியாமல் முத்தமிடுவோம். ஆனால் புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், புதிதாகப் பிறந்த குழந்தையை முத்தமிட வேண்டாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 25 2023, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

குழந்தைகளைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. அவர்களின் அப்பாவிப் புன்னகையும், உலகையே மறக்கச் செய்யும் தோற்றமும், ஒரு நிமிடம் கூட உங்களை விட்டுப் பிரிய விடாது. ஆனால் தாய்மார்கள் சிறு குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு தாயாக நீங்கள் இயல்பாகவே உங்கள் குழந்தையை வைத்திருக்கிறீர்கள். முத்தமிடுகிறீர்கள். ஆனால் வீட்டைச் சுற்றியிருக்கும் அனைவரும் இப்படி குழந்தையைத் தொடுவது நல்லதல்ல. குறிப்பாக அவர்களின் கன்னங்கள் மற்றும் உதடுகளில் முத்தமிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புதிதாகப் பிறந்த குழந்தையை முத்தமிடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். 

29
new born baby

new born baby

நோய் எதிர்ப்பு சக்தி குறைவு: குழந்தைகள் இந்த உலகத்திற்கு வரும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் அவர்கள் வயிற்றில் இருந்து வெளியே வந்த பிறகு முத்தமிடக்கூடாது. ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க தாய்மார்கள் உட்பட அனைவரும் குழந்தைகளை முத்தமிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 
 

39

கிருமிகள் எளிதில் பரவும்: கிருமிகள் தோல் வழியாக மிக விரைவாக பரவும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் இதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளை தேவையில்லாமல் தொடாமல் இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
 

49

சுவாச பிரச்சனைகள்: புதிதாகப் பிறந்த குழந்தையின் சுவாச அமைப்பு அவ்வளவு வலுவாக இருக்காது. ஏனெனில் நுரையீரல் முழுமையாக முதிர்ச்சியடைய 8 ஆண்டுகள் ஆகும். முத்தம் கொடுப்பதால் குழந்தைக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படும். 
 

59

தோல் பிரச்சினைகள்: பெரியவர்கள் முகத்தில் தோல் பராமரிப்பு பொருட்கள் அல்லது மேகப் பயன்படுத்துகின்றனர். பெரியவர்கள் இந்த தயாரிப்புகளால் சில நன்மைகளைப் பெற்றாலும், சிறு குழந்தைகளுக்கு அப்படி இல்லை. இதனால் குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த தயாரிப்புகளில் குழந்தைகளுக்கு தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்தான பொருட்களும் உள்ளன. 

69

ஒவ்வாமை: ஒரு குழந்தைக்கு நட்ஸ்கள், சோயா அல்லது பிற பொதுவான ஒவ்வாமை இருக்கலாம். பாலூட்டும் தாய் இந்த உணவுகளை சாப்பிட்டால், அது குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

79

காய்ச்சல்: காய்ச்சல் பெரியவர்களுக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்சினை. ஆனால், குழந்தைக்கு அப்படியில்லை என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். உங்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், நீங்கள் குழந்தைகளை முத்தமிடும் போது, அது குழந்தைக்கும் வரும்.  இவை தொடுதலின் மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வருகின்றன.

89

குழந்தைகளுக்கு எப்போது முத்தம் கொடுக்க வேண்டும்? 
பிறந்த குழந்தைகளை முத்தமிடாமல் இருப்பது நல்லது. அதேவேளையில், குழந்தைக்கு தன் தாயின் பிணைப்பு மிகவும் அவசியம். தாயின் பிணைப்பால் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் குழந்தைகளைத் தொட சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். முதல் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி முதிர்ச்சியடையாது. எனவே, இந்த நேரத்தில் குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

99

சிறந்த பிணைப்புக்கு, தாலாட்டுப் பாடல்களைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையுடன் பேசுங்கள். இது குழந்தைக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கி, உங்கள் குழந்தைக்கு வசதியாக இருக்கும். மெதுவாக, உங்கள் குழந்தையால் அதிக குரல்களை அடையாளம் காண முடியும்.  முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இதைச் செய்த பிறகு, உங்கள் குழந்தையை மெதுவாக  நீங்கள் முத்தமிடலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved