MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!

இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் மற்றும் வணிக வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் முழுமையான தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு தொழில்நுட்ப உதவியுடன் உடனடி அபராதம் விதிக்கப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 22 2026, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
லாரியை நிறுத்தம் தடை
Image Credit : Google

லாரியை நிறுத்தம் தடை

இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றம் ஒரு கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி மற்றும் வணிக வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் வெறும் 2% மட்டுமே நெடுஞ்சாலைகள் இருந்தாலும், அதில் 30% விபத்துகள் நடைபெறுவது கவலைக்குரியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

25
நெடுஞ்சாலை விதிகள்
Image Credit : Google

நெடுஞ்சாலை விதிகள்

புதிய உத்தரவின்படி, இனி எந்த லாரி அல்லது வணிக வாகனமும் நெடுஞ்சாலையின் முக்கிய பாதையில் அல்லது ஓரங்களிலோ நிறுத்தப்பட முடியாது. அதற்கு பதிலாக, அரசு அனுமதி பெற்ற பார்க்கிங் மண்டலம், lay-by போன்ற குறிப்பிட்ட இடங்களிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டும். இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட லாரிகள் விபத்து காரணமாக இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
படிக்கும்போதே மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) சூப்பர் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!
Related image2
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு... ஆடிப்போன தளபதி
35
உச்சநீதிமன்றம் விதித்த தடை
Image Credit : Google

உச்சநீதிமன்றம் விதித்த தடை

இந்த விதிகளை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்ப உதவி பெரிதும் பயன்படுத்தப்பட உள்ளது. மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ATMS), GPS மூலம் புகைப்பட ஆதாரம் சேகரிப்பு மற்றும் இ-சலான் முறைகள் மூலம் விதிமீறல்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

45
இந்திய சாலை சட்டம்
Image Credit : Google

இந்திய சாலை சட்டம்

மேலும், நெடுஞ்சாலைகளின் அருகே சட்டவிரோதமாக உருவாகியுள்ள கடைகள், உணவகங்கள் போன்ற அமைப்புகளுக்கும் நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது, ஏற்கனவே உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் 60 நாட்களுக்குள் அகற்றப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக்குழு அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

55
இனி ஹைவேயில் லாரி நிறுத்த முடியாது
Image Credit : Google

இனி ஹைவேயில் லாரி நிறுத்த முடியாது

அதே நேரத்தில், சாலை வசதிகளையும் மேம்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் சிறந்த விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பான லாரி நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட வேண்டும். மொத்தத்தில், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நெடுஞ்சாலைகளை பாதுகாப்பாக மாற்றும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உச்ச நீதிமன்றம்
தேசிய நெடுஞ்சாலைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Recommended image2
Hormuz Crisis: இந்த தீவுப் பக்கமே போகாதீங்க! இந்திய கப்பல்களுக்கு நேவி போட்ட புதிய உத்தரவு
Recommended image3
சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Related Stories
Recommended image1
படிக்கும்போதே மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) சூப்பர் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!
Recommended image2
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு... ஆடிப்போன தளபதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved