MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அடுத்த அதிர்ச்சி! நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து! 9 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

அடுத்த அதிர்ச்சி! நவ்காம் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து! 9 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 15 2025, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு
Image Credit : Getty

டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

24
குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது
Image Credit : Getty

குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது

இந்த சம்பவத்திற்கு காரணமான ஒருத்தரையும் விடக்கூடாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Related image1
ஒருத்தனையும் விடக்கூடாது.. ஒவ்வொருத்தனையும் வேட்டையாடுங்க.. NIAக்கு அதிரடியாக உத்தரவிட்ட அமித்ஷா
Related image2
அரசியலை விட்டு விலக இன்னொரு வாய்ப்பு! ராகுல் காந்திக்கு குஷ்பு அட்வைஸ்!
34
நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து
Image Credit : Asianet News

நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து

இந்நிலையில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த பெரும் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் காவல் நிலையம் மற்றும் வாகனங்கள் எரிந்து நாசமாகின.

44
வெடிபொருட்களை ஆய்வு செய்த போது விபத்து
Image Credit : Asianet News

வெடிபொருட்களை ஆய்வு செய்த போது விபத்து

பரிதாபாத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 360 கிலோ வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் காவல் நிலையத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜம்மு காஷ்மீர்
காவல் நிலையம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved