MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மயக்க ஊசி செலுத்தி மனைவி கொலை.. 6 மாதங்களுக்கு பிறகு டாக்டர் கணவர் சிக்கியது எப்படி? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

மயக்க ஊசி செலுத்தி மனைவி கொலை.. 6 மாதங்களுக்கு பிறகு டாக்டர் கணவர் சிக்கியது எப்படி? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

பெங்களூருவில் பெண் மருத்துவர் கிருத்திகா ரெட்டி, உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு தடயவியல் அறிக்கை மூலம் அவர் மயக்க ஊசி செலுத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

2 Min read
vinoth kumar
Published : Oct 17 2025, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 மருத்துவ தம்பதி
Image Credit : Asianet News

மருத்துவ தம்பதி

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாரத்தஹள்ளி அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி (29) என்ற மகள்கள் இருந்தனர். இருவரும் மருத்துவர். இந்நிலையில் கிருத்திகா ரெட்டிக்கும், மகேந்திர ரெட்டிக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்று பெங்களூருவில் வசித்து வந்தனர். மகேந்திர ரெட்டி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

25
மயங்கி விழுந்து உயிரிழந்த கிருத்திகா ரெட்டி
Image Credit : Asianet News

மயங்கி விழுந்து உயிரிழந்த கிருத்திகா ரெட்டி

அதே மருத்துவமனையில் தான் கிருத்திகா ரெட்டியும் மருத்துவராக பணியாற்றினார். இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கிருத்திகா ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்த போது திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கினார். இதனையடுத்து அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மாரத்தஹள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Related Articles

Related image1
மனுஷங்களுக்கு சாவு எப்படி எல்லாம் வருது பார்த்தீங்களா! 60வது திருமணத்தை கொண்டாட திருக்கடையூருக்கு சென்ற தம்பதி ப*லி
Related image2
சாதி மறுப்பு திருமணம்! மகளின் தாலியை அறுக்க காரணமாக இருந்த தந்தை! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
35
கிருத்திகா ரெட்டியின் அக்கா புகார்
Image Credit : Asianet News

கிருத்திகா ரெட்டியின் அக்கா புகார்

அப்போது கிருத்திகா ரெட்டி குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அஜீரண கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் புகார் அளிக்க முன்வரவில்லை. அப்படி இருந்த போதிலும் போலீசார் வலியுறுத்தலின்பேரில் கிருத்திகா ரெட்டியின் அக்கா நிகிதா புகார் அளித்தார்.

45
 6 மாதங்களுக்கு மகேந்திர ரெட்டி கைது
Image Credit : Asianet News

6 மாதங்களுக்கு மகேந்திர ரெட்டி கைது

இதனையடுத்து கிருத்திகா ரெட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கிருத்திகா ரெட்டி உயிரிழந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கிருத்திகா ரெட்டி சாவில் 6 மாதங்களுக்கு பின்பு மகேந்திர ரெட்டி சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கிருத்திகா ரெட்டியின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டுப்பிடிக்க சில மாதிரிகளை தடய அறிவியல ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. அதில், கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என்றும், அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்தது அறிக்கையில் தெரியவந்தது.

55
மயக்க ஊசி செலுத்தி கொலை
Image Credit : ANI

மயக்க ஊசி செலுத்தி கொலை

மேலும் கிருத்திகா ரெட்டிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்ததால், அவரை கொலை செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். ஆகையால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அவரது தந்தை வீட்டுக்கு வந்த கிருத்திகா ரெட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
கொலை
மனைவி
டாக்டர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved