MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னையில் பிரபல தொலைக்காட்சிக்கு சீல்.! என்ன காரணம் தெரியுமா.?

சென்னையில் பிரபல தொலைக்காட்சிக்கு சீல்.! என்ன காரணம் தெரியுமா.?

மயிலாப்பூரில் உள்ள 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் இயக்குனரும், பாஜக ஆதரவாளருமான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி நிறுவனம் மற்றும் அவரது தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Aug 18 2024, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தேவநாதன் யாதவ் கைது

பாஜக ஆதரவாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’இயக்குனராக உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஆவார்கள். தங்களது ஓய்வூதிய பணத்தை அனைத்தையும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

24

நிதி நிறுவன மோசடி

இந்த நிறுவனத்தில் அதிகளவில் வட்டி தருவதாக ஆசைக்காட்டி ஏமாற்றி பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் உரிய முறையில் பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் தினந்தோறும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிறுவனத்தை நூறுக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் வகையில்  இரண்டு வாரங்கள் தள்ளி தேதியிட்ட செக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
 

34

11 இடங்களில் சோதனை

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர். அவருடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த குணசீலன் மற்றும மகிமைநாதன் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதனுக்கு சொந்தமான இடத்தில் இன்று சோதனை நடைபெற்றது. 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். 

தயாநிதி அழகிரியின் உடல்நிலை எப்படி இருக்கு தெரியுமா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ

44

வின் டிவிக்கு சீல்

இந்த சோதனையின் போது 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் மைலாப்பூர் நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ்வின் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
குற்றம்
தமிழ்நாடு
காவல்
பிஜேபி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved