விடுதலை ஆகிறார் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர்! மோசடி வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது எப்படி?
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
Ravindar Mahalakshmi
லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கூட இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இதனிடையே கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.
Ravindar chandrasekar
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ரூ.16 கோடி வாங்கி ரவீந்தர் ஏமாற்றியதாகவும், இதுதவிர மேலும் இருவரிடம் ரூ.8 கோடி வாங்கி ஏமாற்றியதாகவும் ரவீந்தர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ravindar wife mahalakshmi
இந்த புகாரின் அடிப்படையில் ரவீந்தர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ரவீந்தரை ஜாமீனில் வெளியே கொண்டுவர மகாலட்சுமி எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் கடந்த ஒரு மாதமாக சிறைவாசம் அனுபவித்து வந்த ரவீந்தருக்கு தற்போது ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.
Ravindar got conditional bail
ரவீந்திரனின் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையோடு ரவீந்தர் சந்திரசேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்... காப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய லோக்கி..! 'லியோ' இந்த ரெண்டு படங்களின் தழுவலா? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!