Ramya Krishnan Net Worth: 13 வயதில் நடிக்க துவங்கிய ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகி, தற்போது குணச்சித்திர வேடத்தில் பட்டையை கிளப்பி வரும், நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். ஆரம்ப காலத்திலேயே கவர்ச்சியில் வெளுத்து வாங்கிய ரம்யா கிருஷ்ணனுக்கு தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல படங்களிலும் வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.
200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் வில்லியாகவும், குணச்சித்திர வேடத்திலும் துணிந்து இறங்கி நடித்தார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
வெள்ளித்திரை மட்டும் இன்றி, சின்னத்திரையிலும் தங்கம், வம்சம் போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்தார் ரம்யா கிருஷ்ணன். அந்த சமயத்தில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் ராஜ மாதாவாக நடித்த,'பாகுபலி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் திரையுலகில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கினார். மேலும் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்த 'ஜெயிலர்' திரைப்படம், வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது மட்டும் இன்றி இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
வாணி போஜனை தொடர்ந்து சன் டிவி சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பார்ட்! கதாநாயகியாக மாறிய சீரியல் நடிகை !
தன்னுடைய 13 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 52 வயது வரை... இடைவிடாது சுமார் 39 வருடங்களாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், எத்தனை கோடி சொத்துக்கு அதிபதி என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 98 கோடி முதல் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் இவருக்கு சென்னையில் முக்கிய பகுதிகளில் 3 வீடுகள் உள்ளதாகவும், 3 சொகுசு கார்களையும் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.