MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Chennai Heavy Rain:அதிகாலையிலேயே பொளந்து கட்டும் கனமழை!சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Chennai Heavy Rain:அதிகாலையிலேயே பொளந்து கட்டும் கனமழை!சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Nov 25 2023, 07:02 AM IST| Updated : Nov 25 2023, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

24

இதனிடையே,  கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34

அதன்படி சென்னையில் மந்தைவெளி, திருவான்மியூர், பட்டினபாக்கம், சாந்தோம், கிண்டி, வடபழனி, அண்ணாநகர், கிண்டி, ராமாபுரம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, போரூர் உள்ளிட்ட இடங்களில்  நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான எண்ணூர், ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

44

விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நேற்றே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved