விஜய் டிவி ஒளிபரப்பாகும் 'கண்ணே கலைமானே' சீரியலில் இருந்து வெளியேறும் நந்தா! இனி அவருக்கு பதில் இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணே கலைமானே; சீரியலில், ஹீரோவாக நடித்து வந்த நடன இயக்குனர் நந்தா, இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விஜய் டிவி தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட சீரியல் 'கண்ணே கலைமானே'. பானு என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பட வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்லும் நாயகன் ராம் விபத்து ஒன்றில் சிக்கி, தன்னுடைய நினைவுகளை இழக்கிறார். இவரை மாதுரி என்கிற இன்னொரு பெண் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
ராமின் முதல் திருமணம் குறித்து மாதுவின் பெற்றோருக்கு தெரிய வர, தன்னுடைய மகளின் வாழ்க்கையில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக, பானுவை லாரியை ஏற்றி கொன்றுவிட முடிவு செய்கின்றனர். இந்த விபத்தில் பானுவுக்கு கண் பார்வை பறிபோகிறது. மேலும் ராமால் ஒரு குழந்தையும் பானுவுக்கு பிறக்கும் நிலையில், தன்னுடைய அண்ணியின் கொடுமைகளுக்கு நடுவே குழந்தையையும் வளர்க்கிறார் பானு.
பின்னர் அண்ணியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறும் பானு, சென்னைக்கு வருகிறார். எங்கெங்கோ சுற்றி அலையும் பானுவுக்கு மாது அவருடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க இடம் கொடுக்கிறார். பின்னர் இந்த சீரியலில் அடுத்தடுத்த பல ட்விஸ்ட் அடங்கியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ராமுக்கு பழைய நினைவுகள் திரும்ப வர, பானுவை ஒரு பாடகியாக மாற்றி மாறி கண் பார்வையையும் திரும்பப் வரும் படி செய்கிறார்.
ஆனால் ராம் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கும் பானு அவரை மன்னிக்க மறுக்கிறார். ஆனால் எப்படியும் பானுவுடன் பானு உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தவிக்கும் ராம், தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சீரியல் TRP-யில் சற்று டல்லடிக்கும் நிலையில், விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிரடியாக இந்த சீரியலில் இருந்து நந்தா வெளியேற உள்ளதாகவும், இவருக்கு பதில் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்து வரும், நவீன் வெற்றி ராம் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க பிரபலத்தின் மனைவி உட்பட இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் 5 முக்கிய பிரபலங்கள் ?