MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • என்ன நடிப்புடா சாமி.. உல்லாசத்துக்காக புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

என்ன நடிப்புடா சாமி.. உல்லாசத்துக்காக புருஷனையே போட்டு தள்ளிய கொடூர மனைவி! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை போட்டு தள்ளிவிட்டு மாயமானதாக நாடகமாடி மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min read
vinoth kumar
Published : Apr 24 2023, 10:50 AM IST| Updated : Apr 24 2023, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் மாலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும்  ஞானசேகரன் மறுநாள் காலை 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

26

இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி இரவு வேலைக்கு சென்ற ஞானசேகரன் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த மனைவி லூர்துமேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர். 

36
illegal love

illegal love

இதனிடையே சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வம்(40) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்த போது ஞானசேகரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

46
illegal love

illegal love

இது தொடர்பாக செல்வம் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்தார். அதில், செல்வத்துக்கும், ஞானசேகரின் மனைவி லூர்துமேரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரத்தை அறிந்த ஞானசேகரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

56

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய மனைவி மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர். அதன்படி போதை தலைக்கேரும் அளவிற்கு ஞானசேகருனுக்கு மது குடிக்க வைத்துள்ளார். பின்னர்,  செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஞானசேகரன் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்ததும் தெரியவந்தது.

66

கணவரை போட்டு தள்ளிவிட்டு மாயமானதாக நாடகமாடி மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பரை தேடிவருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
Recommended image2
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி
Recommended image3
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved