விஜய் டிவி சீரியலில் இருந்து திடீர் என வெளியேறிய ஹீரோயின்? மீண்டும் இப்படி நடப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், முன்னணி சீரியலில் இருந்து, இரண்டாவது முறையாக ஹீரோயின் வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சின்னத்தம்பி சீரியலுக்கு பின், ப்ரஜின் நடித்து வரும் சீரியல் 'அன்புடன் குஷி'
இந்த சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக ஆரம்பத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்த நிலையில், பின்னர் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
அவர் வெளியேறியதால், ஹீரோயினாக நடிக்க குஷி கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வந்தார்.
சுமார் 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இருந்து இரண்டாவது முறையாக நாயகி ரேஷ்மாவும் வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பதாவது, நான் அன்புடன் குஷி தொடரிலிருந்து விலகுகிறேன். இனி என்னை அத்தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது.
அந்தக் கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்கிறேன். அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆதரவு எனக்கு என்றும் தேவை. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா
மான்சி ஜோஷியை விட, குஷி காதாபாத்திரத்தில் ஒன்றி நடித்து வந்த ரேஷ்மா வெளியேறுவதாக அறிவித்ததும், ரசிகர்கள் பலர், நீங்கள் இந்த தொடரில் நடித்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.