- Home
- Cinema
- Radhika Dengue Fever : நடிகை ராதிகா மருத்துவனையில் அனுமதி – 5 நாட்களுக்கு பிறகே வீடு திரும்புவாரா?
Radhika Dengue Fever : நடிகை ராதிகா மருத்துவனையில் அனுமதி – 5 நாட்களுக்கு பிறகே வீடு திரும்புவாரா?
Radhika Sarathkumar Dengue Fever : நடிகை ராதிகா சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை ராதிகா திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த கிழக்கே போகும் ரயில் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா.
ராதிகா சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி
இந்த படத்திற்கு பிறகு இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், வேலும் மயிலும் துணை, பாமா ருக்மணி, போக்கிரி ராஜா, நாட்டாமை என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் கால் பதித்துள்ளார். இப்போது அரசியலிலும் இறங்கியிருக்கிறார்.
ராதிகா மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் தான் ராதிகா உடல்நிலை சரியில்லாத நிலை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் வரும் 5ஆம் தேதி வரையில் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
ராதிகா சரத்குமார்
ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராதிகா விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.