MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Power Star Srinivasan Case: ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடியை சுருட்டிய சீட்டிங் ஜாம்பவான் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது!

Power Star Srinivasan Case: ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடியை சுருட்டிய சீட்டிங் ஜாம்பவான் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது!

Power Star Srinivasan cheating case: ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min read
Rsiva kumar
Published : Jul 30 2025, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
Image Credit : our own

பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான பவர்ஸ்டார் சீனிவாசன் லத்திகா என்ற படம் மூலமாக தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இந்தப் படம் தான் அவருக்கு பவர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று கொடுத்தது.

25
பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி
Image Credit : our own

பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி

உனக்காக ஒரு கவிதை என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், இந்திரசேனா, நீதானா அவன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, அழகன் அழகி, சும்மா நச்சுன்னு இருக்கு, ஆர்யா சூர்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

35
சீனிவாசன் கைது, பவர்ஸ்டார் சீனிவாசன் கைது
Image Credit : our own

சீனிவாசன் கைது, பவர்ஸ்டார் சீனிவாசன் கைது

இந்த நிலையில் தான் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

45
பவர்ஸ்டார் சீனிவாசன்
Image Credit : our own

பவர்ஸ்டார் சீனிவாசன்

இதற்கு முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு யாபாரத்திற்கு ரூ.10 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்துள்ளார். இதே போன்று கோவாவைச் சேர்ந்தவர், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பலருக்கும் கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீனிவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

55
சீட்டிங் பேர்வளி பவர் ஸ்டார் சீனிவாசன்
Image Credit : our own

சீட்டிங் பேர்வளி பவர் ஸ்டார் சீனிவாசன்

அப்போது அவர் மீது கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படி பல வழக்குகள் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது புதிதாக ரூ.5 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் சிறுநீரக கோளாறு முற்றிய நிலையில் இருக்கும் நிலையில் உடல் நிலையை காரணம்காட்டி ஜாமீனில் வெளியில் வருவார் என்று கூறப்படுகிறது

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved