MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Alert: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.70 ஆயிரம் சம்பளம்.! 10 நாட்களுக்குள் விண்ணப்பித்தால் அரசு வேலை.!

Job Alert: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.70 ஆயிரம் சம்பளம்.! 10 நாட்களுக்குள் விண்ணப்பித்தால் அரசு வேலை.!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 10 2025, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலை
Image Credit : Pixabay

8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலை

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களை உள்ளடக்கியதாகும். மொத்தம் 80 காலியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.  கோவையில் 18 இடங்கள், தஞ்சாவூரில் 31, வேலூரில் 5, கடலூரில் 9, திருப்பூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம், திருச்சியில் 8, தூத்துக்குடியில் 2 மற்றும் நாகர்கோவிலில் 5 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
தகுதி இதுதான்.!
Image Credit : AI

தகுதி இதுதான்.!

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவச் சான்று அவசியம். விண்ணப்பிக்கும் நபர் 01.07.2025 தேதியின்படி 35 வயதை கடந்திருக்கக் கூடாது.

Related Articles

Related image1
Job Vacancy: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் அரசு வேலை.! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க.!
Related image2
Job Alert: ரூ.2.2 லட்சம் சம்பளம்.! காத்திருக்கிறது மத்திய அரசு பணி.! பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்.!
34
சம்பளம் மற்றும் தேர்வு முறை
Image Credit : Getty

சம்பளம் மற்றும் தேர்வு முறை

அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு அதிகபட்சமாக ரூ.71,900 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நியமனம் தற்காலிகமானது. தேவையெனில் பணிநியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் கண்காணிப்பு பொறியாளருக்கு உண்டு.

44
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : getty

விண்ணப்பிக்கும் முறை

மாவட்ட இணையதளங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் நவம்பர் 20, 2025க்குள் சென்று சேர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு, குறைந்த கல்வித்தகுதியுடன் அரசு துறையில் உயர்ந்த சம்பளம் பெறும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved