டிகிரி முடித்தால் போதும்.. வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு, டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் பதவிக்கு 162 காலியிடங்களை அறிவித்துள்ளது. இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நபார்டு வங்கி
நபார்டு (NABARD) எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் விவசாய மேம்பாட்டுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம், விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
பணியிடங்கள் விவரம்
காலி பணியிடங்கள் விவரம்
நபார்டு வங்கியானது (NABARD) இந்தியா முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள Development Assistant பணியிடங்களை நிரப்பட உள்ளது.
பணியிடங்கள் விவரம்
டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (குரூப் பி) - 159, டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (இந்தி) - 03 பணியிடங்கள்
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (இந்தி) (குரூப் 'பி') பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஆங்கிலம்/இந்தி வழியில் இளங்கலைப் பட்டம் பெற்று, இந்தி மற்றும் ஆங்கிலத்தை கட்டாய/விருப்பப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். இதில் பொது பிரிவினர் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD/EXS பிரிவினர் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 21 வயது முதல் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வயது சலுகை அளிக்கப்படும்.
சம்பளம்
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதுதவிர, வங்கி ஊழியர்களுக்கான இதர படிகள் மற்றும் சலுகைகளும் கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பக் கட்டணம்
எஸ்சி (SC), எஸ்டி (ST), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு: ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். இதர பிரிவினருக்கான கட்டணம் ரூ.450 ஆகும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.nabard.org என்ற இணையதளத்திற்குச் செல்லவும். விண்ணபிக்க பிப்ரவரி 03ம் தேதி கடைசி நாளாகும்.

