MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பிஎம் கிசான்: 21வது தவணை எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பிஎம் கிசான்: 21வது தவணை எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 21வது தவணைக்கான எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தகுதியுடையவர்கள் யார், யாருக்கெல்லாம் கிடைக்காது, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இங்கே.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 05 2025, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிஎம் கிசான் 21வது தவணை
Image Credit : ChatGPT

பிஎம் கிசான் 21வது தவணை

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா கீழ் இதுவரை 20 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி மூன்று சம தவணைகளாக வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். கடந்த மாதம் மட்டும், பிரதமர் மோடி தலைமையில் 20வது தவணையாக ரூ.20,500 கோடி, 9.7 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டது. இப்போது அனைவரும் 21வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

25
பிஎம் கிசான் யோஜனா என்றால் என்ன?
Image Credit : Getty

பிஎம் கிசான் யோஜனா என்றால் என்ன?

இந்தத் திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயக் குடும்பங்களுக்கு நேரடி நிதியுதவி வழங்கி, அவர்கள் நிம்மதியாக வாழ்க்கையை நடத்த உதவுவதே இதன் நோக்கம். தகுதியான விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்படும். இது மூன்று தவணைகளாக வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

Related Articles

Related image1
PhonePe Loan : போன்பேவில் 10 நிமிடத்தில் கடன் கிடைக்கும்.. குஷியில் வாடிக்கையாளர்கள்
Related image2
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம்! விவசாயி மகள் டூ துணை ஆட்சியர்! இது கதிர்செல்வியின் வெற்றிக் கதை!
35
21வது தவணை யாருக்குக் கிடைக்கும்?
Image Credit : Asianet News

21வது தவணை யாருக்குக் கிடைக்கும்?

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். நிலம் விவசாயியின் பெயரில் பிப்ரவரி 1, 2019க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு, விவசாயியின் வங்கிக் கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு, NPCIயுடன் சரியாக செயல்பட வேண்டும்.

45
21வது தவணை யாருக்குக் கிடைக்காது?
Image Credit : Asianet News

21வது தவணை யாருக்குக் கிடைக்காது?

சொந்தமாக நிலம் இல்லாதவர்கள், குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் திட்ட நன்மை பெற்றிருந்தால், 18 வயதுக்கு குறைவானவர்கள், அரசு நில உரிமையாளர்கள், NRI களுக்கு இந்த தவணை கிடையாது. அதேபோல், அரசு/அரசு சார்ந்த நிறுவன ஊழியர்கள், அதிக ஓய்வூதியம் பெறுவோர், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்கள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், CA போன்ற தொழிலில் ஈடுபட்டவர்களும் இதில் சேர முடியாது.

55
விவசாயி நிதியுதவி திட்டம்
Image Credit : ChatGPT

விவசாயி நிதியுதவி திட்டம்

தகுதியானவர்கள் [pmkisan.gov.in](http://pmkisan.gov.in) இணையதளத்தில் சென்று, "விவசாயிகள் பகுதி" மூலம் பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்களையும், வங்கிக் கணக்கையும் இணைத்தால், திட்டத்தின் கீழ் தவணைகள் தானாகவே அவர்களின் கணக்கில் சேரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி
விவசாயம்
இந்தியா
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
PhonePe Loan : போன்பேவில் 10 நிமிடத்தில் கடன் கிடைக்கும்.. குஷியில் வாடிக்கையாளர்கள்
Recommended image2
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முதலிடம்! விவசாயி மகள் டூ துணை ஆட்சியர்! இது கதிர்செல்வியின் வெற்றிக் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved