MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஸ்மார்ட் முதலீடு! ரூ.2 ஆயிரம் சேமித்தால் ரூ.27 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!!

ஸ்மார்ட் முதலீடு! ரூ.2 ஆயிரம் சேமித்தால் ரூ.27 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!!

கிராமப்புற மக்களை மனதில் வைத்து மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் காப்பீட்டின் பலனை அளிக்கும் திட்டமாக உள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Nov 25 2024, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கிராமப்புற மக்களை மனதில் வைத்து மத்திய அரசு சிறப்பு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் காப்பீட்டின் பலனை அளிக்கும் திட்டமாக உள்ளது.

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பல மடங்கு பயனடைவார்கள்.

26

18 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று இத்திட்டத்தில் சேரலாம். ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற தேவையான ஆவணங்களும் புகைப்படங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

36

இத்திட்டத்தில், நடுவில் டெபாசிட் செய்ய பணம் இல்லாவிட்டாலும், ஓரிரு வருடம் கழித்து இந்தப் பாலிசியைத் தொடரலாம். இந்த பாலிசியை எடுத்தவருக்கு விபத்து மூலம் மரணம் ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு (நாமினி) காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்

46

உதாரணமாக, 19 வயதில் ரூ.10 லட்சம் காப்பீட்டுக்கு போஸ்ட் ஆபிஸ் எண்டோவ்மென்ட் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால், பிரீமியமாக மாதம் ரூ. 5278 டெபாசிட் செய்ய வேண்டும். 16 ஆண்டுகள் கழித்து, அதாவது உங்கள் 35 வயதில் பாலிசி முதிர்வு அடையும்போது ரூ. 17.68 லட்சம் வரும்.

56

முதிர்வு வயதை 40 ஆண்டுகள் என வைத்துக்கொண்டால், அதாவது 21 ஆண்டுகளுக்கு பாலிசி பிரீமியத்தை செலுத்த விரும்பினால் மாதம் ரூ. 3866 செலுத்தினால் போதும். முதிர்ச்சியின்போது நீங்கள் ரூ.20 லட்சத்திற்கு மேல் பெறுவீர்கள்.

66

இந்தப் பாலிசியை 31 வருடங்களுக்குத் தொடர்ந்தால், மாதம் ரூ.2500 வரை டெபாசிட் செய்ய வேண்டும். முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ.24.88 லட்சமாக இருக்கும். 36 ஆண்டுகள் பாலிசியை எடுத்தால், மாதம் ரூ.2,000 செலுத்த வேண்டும். இதன் மூலம் முதிர்வுத் தொகையாக ரூ.27.28 லட்சம் பெறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Recommended image2
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image3
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved