MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PF பணம் மூன்றே நாளில் கிடைக்கும்! அவசரத் தேவைக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் செய்யும் EPFO!

PF பணம் மூன்றே நாளில் கிடைக்கும்! அவசரத் தேவைக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் செய்யும் EPFO!

இபிஎப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎஃப் கணக்கில் பணம் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

1 Min read
SG Balan
Published : May 18 2024, 12:20 PM IST| Updated : May 18 2024, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
EPFO News

EPFO News

இபிஎப்ஓ எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பணியாளர்களின் வருவங்கால வைப்பு நிதி நிர்வகிக்கப்படுகின்றது. இதன்படி மாதாமாதம் பிஎஃப் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இபிஎஃப் பெறும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

26
EPFO Claims

EPFO Claims

அனிருத் பிரசாத் என்பவர் மருத்துவ சிகிச்சை செலவுக்காக கோரிய தொகை அவருக்கு 3 நாட்களுக்குள் கிடைத்துள்ளது. அனிருத் பிரசாத் கடந்த மே 9ஆம் தேதி சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது என EPFO ​​ல் விண்ணப்பித்தார். அடுத்த இரண்டே நாட்களில், அதாவது மே 11ஆம் தேதியே அவர் கோரிய முன்பணம் ​​ரூ.92,143 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

36
EPFO Auto Settlement

EPFO Auto Settlement

EPFO ல் உள்ள ஆட்டோ க்ளைம் (Auto Mode Settlement) வசதியால் அனிருத் கேட்ட பணம் விரைவாகக் கிடைத்துள்ளது. இதன்படி, ல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்காக முன்பணம் கோரினால் தானாகவே அந்தப் பணம் விடுவிக்கப்படும்.

46
EPFO employees

EPFO employees

நடப்பு ஆண்டில், இந்த வசதியை 2.25 கோடி பேர் பயன்படுத்திக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EPFO மே 6ஆம் தேதி நாடு முழுவதும் இந்தச் சேவையைத் தொடங்கியது. இதுவரை 13,011 பேருக்கு 45.95 கோடி ரூபாய் விரைவாகச் விடுக்கப்பட்டுள்ளது.

56
EPFO claim in 3 days

EPFO claim in 3 days

2023-24 நிதியாண்டில், இ.பி.எஃப்.ஓ. ​​4.45 கோடி கோரிக்கைகளை செட்டில் செய்துள்ளது. அதில் 2.84 கோடி கோரிக்கைகள் முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டவை. 89.52 லட்சம் முறை ஆட்டோ-மோட் மூலம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ க்ளைம் முறையின் கீழ் விடுவிக்கப்ப்படும் தொகையின் வரம்பு ரூ.50,000 லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது EPFO ​​உறுப்பினர்களாக உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயனளிக்கிறது.

66
EPFO

EPFO

இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தானாகவே பணம் விடுவிக்க ஒப்புதல் வழங்கப்படும். பணத்தை செட்டில் செய்ய ஆகும் காலமும் 10 நாட்களில் இருந்து 3 முதல் 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved