MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கிகள் இனி 'இந்த' 5 நாட்களில் மட்டும் தான் இயங்கும்?; வரப்போகும் மாற்றம்; முழு விவரம்!

வங்கிகள் இனி 'இந்த' 5 நாட்களில் மட்டும் தான் இயங்கும்?; வரப்போகும் மாற்றம்; முழு விவரம்!

வங்கிகளில் டெபாசிட் உள்ளிட்ட பரிவர்த்தனை நடைபெறும் நிலையில், இதில் மத்திய அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இது தொடர்பான விவரத்தை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
| Updated : Jan 10 2025, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது மாதத்தின் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் வங்கிகள் முழுமையாக இயங்குவதால் பெரும் பணிச்சுமைக்கு ஆளாவதாக வங்கி ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், வங்கிகள் தொடர்பாக மத்திய அதிரடி மாற்றத்தை கொண்டு வர உள்ளது. 
அதாவது வங்கிகளின் டெபாசிட் உள்ளிட்ட பணபரிவர்த்தனைகளில் இந்த மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.

25

பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் நியமிக்கப்படும், மேலும் நேரங்களும் மாறும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது வங்கிகளில் இனிமேல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே மக்கள் பணபரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்  சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்று  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இப்போது பெரும்பாலான வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பணவரிவர்த்தனை செய்யப்படுகிறது. ஆனால் இனிமேல் மாலை 6 மணி வரை பணவரிவர்த்தனை செய்யும் வகையில் மாற்றம் வரப்போகிறது. என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 

35

தங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்தனர். மத்திய அரசு இறுதியாக அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க உள்ளது.

ஆனால் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பது வங்கி ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பது தெரியவில்லை. வாரத்தில் 5 நாள் வேலை நேரத்தை ஈடுகட்ட வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். பரிவர்த்தனைகள் இப்போது பல கூடுதல் மணிநேரங்களுக்குத் தொடரும்.

 

 

45

பொதுமக்களை பொறுத்தவரை வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே இயங்கினால் பணவரிவர்த்தனை நேரம் நீட்டிக்கப்படும். மாலை 6 மணி வரை வங்கிகளைத் திறந்து வைத்திருக்க முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் மாலை 3 மணிக்கு பிறகும் எளிதாக பணபரிவர்த்தனை செய்ய முடியும்.  மாலையிலும் உங்கள் வங்கி பணிகளை முடிக்கலாம்.

இனிமேல் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நடைமுறை வந்தால் வங்கி ஊழியர்கள் இந்த 5 நாட்களுக்குள் மொத்த பணிகளையும் முடிக்க வேண்டும். ஒருபுறம் பார்த்தால் அவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இதனால் அவர்களால் வாடிக்கையாளர்களுக்கு கனிவுடன் சேவையை செய்ய முடியுமா? என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை. 

 

 

55

தற்போது வரை வங்கி மாற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ வரலாம் என்று சில வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved