Gold Rate Today : மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய திருதி வருவதால் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5.676க்கு விற்பனையானது.
இன்றைய (ஏப்ரல் 14) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5.720ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,168ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,344ஆக விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 1.20 காசுகள் உயர்ந்து ரூ.83.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.