MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • CAR ரீ-பெயின்டிங் செய்ய அனுமதி பெற வேண்டும்! ஏன் தெரியுமா?

CAR ரீ-பெயின்டிங் செய்ய அனுமதி பெற வேண்டும்! ஏன் தெரியுமா?

உங்கள் காரின் வண்ணத்தை மாற்றுவது சட்டப்பூர்வமானது, ஆனால் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆர்.சி புத்தகத்தில் வண்ணத்தைப் பதிவு செய்யாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது. இந்த செயல்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் பற்றி மேலும் அறிக.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 03 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தோற்றம், வண்ணங்களை மாற்றும் இளைஞர்கள்!
Image Credit : Meta AI

தோற்றம், வண்ணங்களை மாற்றும் இளைஞர்கள்!

நம் நாட்டில் வாகனங்களை ஒரே மாதிரியான தோற்றத்தில் வைத்துக்கொள்வதற்குப் பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘‘என்னுடைய கார் என்னுடைய ஸ்டைல்’’ என்கிற எண்ணம் அவர்களைச் சுற்றி அலைகிறது. காரின் கலரை மாற்றுவது அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை தரும். அதனால்தான் வண்ண வண்ண கார்களும், ஸ்டைலான டூயல் டோன் கார்களும் நம் தெருக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ராயல் என்ஃபீல்டு போன்ற நிறுவனங்கள் MIY (Make It Yours) என்ற தனிப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி பைக்குகளை வர்ண சித்திரமாக மாற்ற அனுமதித்து வருகின்றன. ஆனால் கார்களுக்கு இதுபோன்ற வசதி இன்னும் முழுமையாக இல்லை. சில கார்களை மட்டும் அட்செசரீஸ் ரீதியில் மாற்றிவிட முடியும்.

25
சட்ட அனுமதி கட்டாயம்
Image Credit : meta ai

சட்ட அனுமதி கட்டாயம்

உங்களால் விரும்பிய வண்ணத்தில் உங்கள் காரை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இது சட்டத்தின் கீழே நடக்க வேண்டிய விஷயம்தான். காரணம், உங்கள் காரின் அடையாளத்தை நிரூபிக்கும் முக்கிய ஆவணம் ஆர்சி புக். இதில் காரின் இன்ஜின் நம்பர், சேஸிஸ் நம்பர், வண்ணம், இருக்கை எண்ணிக்கை என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் கலரை மாற்றி விட்டு அதை ஆர்சியில் பதிவு செய்யாமல் விட்டால், ஒரு விதமாக சட்டவிரோதமாகும். உங்கள் கார், எந்த சந்தேகமான சம்பவங்களில் சிக்கினாலும் ஆர்சி புத்தகத்தில் உள்ள விவரமே முக்கிய ஆதாரம்.

Related Articles

Related image1
Top 5 Expensive Cars: இந்தியாவின் 5 மிக விலை உயர்ந்த கார்கள், அதன் உரிமையாளர்கள்
Related image2
இனி குடும்பத்தோட ஜாலியா ட்ரிப் போகலாம்! குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் கார்கள்
35
ஆர்டிஓ அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்
Image Credit : pexels

ஆர்டிஓ அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது: முதலில் நீங்கள் எந்த பாடி ஷாப்பில் பெயின்ட் செய்வதென்றால், அந்த பாடி ஷாப்பிடம் கலர் எண்டார்ஸ்மென்ட் கடிதம் பெற வேண்டும். இதில் பழைய கலர் என்ன, புதிய கலர் என்ன என்று குறிப்பிட்டிருக்கும். பிறகு, உங்கள் கார் பதிவு செய்யப்பட்டுள்ள ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்று NAMV (Notice for Alterations of Motor Vehicles) அப்ளிகேஷன் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்துடன் பாடி ஷாப் கடிதம் மற்றும் உங்கள் அடையாள ஆவணங்களைச் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரி பரிசீலித்து அனுமதி வழங்குகிறார். சிலர் முன்பே ஆர்டிஓ அலுவலகத்தில் மனு தருவார்கள். ஆனால் பெயின்ட் முடிந்த பிறகே அனுமதி கோருவது எளிமையான வழி.

45
செலவு அதிகரிக்கும்
Image Credit : meta ai

செலவு அதிகரிக்கும்

இவ்வாறு மனுவை சமர்ப்பித்த பின்னர், சுமார் 30 நாட்களில் உங்கள் புதிய ஆர்சி புக் வரும். அதில் புதிய கலர் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதனால் சட்டப்பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. இதற்கான நிதி செலவையும் முன்பே புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஹேட்ச்பேக் கார்களுக்கு முழுமையான கலர் மாற்ற செலவு சுமார் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை வரும். செடான் வகைக்கு இது ரூ.50,000 வரை உயரலாம். மேல் கலர் மாற்றச் செலவுகளுடன் ஆர்டிஓ வசூலும் சேரும்.

55
புதிய வண்ணம் இனிய பயணத்தை தரும்
Image Credit : Meta Ai

புதிய வண்ணம் இனிய பயணத்தை தரும்

பெரும்பாலும் இந்த செலவுகளும், நேரத்தையும் கொண்டு எல்லோருக்கும் இது சுலபமான விஷயம் அல்ல. ஆனால் சிலருக்கு கார் வண்ணமே பெருமையான அடையாளமாக இருக்கிறது. ‘‘பணம் பிரச்சினை அல்ல, ஸ்டைல் தான் முக்கியம்’’ என்று நினைப்பவர்கள் இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். ஆனாலும், சட்ட பூர்வமான பதிவே உங்கள் பாதுகாப்பு. முடிவில், உங்கள் கார் வண்ணத்தை மாற்றி, புதிய ஆர்சி பதிவோடு சட்ட விரோத பிரச்சினைகளில்லாமல் சுகபோகமாக பயணம் செய்யும் சுதந்திரம், உங்கள் கையில்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாகன பராமரிப்பு
தானுந்து கழுவுதல்
வாகனம்
தானியங்கி கார்கள்
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved