MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: 40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம்! சனி - குரு அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசிகள்!

Astrology: 40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம்! சனி - குரு அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசிகள்!

Astrology: 40 வயதிற்கு பின் சனி மற்றும் குருவின் அருளால் 4 ராசியினருக்குத் தடைகள் விலகி, தொழில் வளர்ச்சி மற்றும் அபரிமிதமான கோடீஸ்வர தன யோகம் கூடிவரும். அவை என்னென்ன ராசிகள்? என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 07 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்
Image Credit : AI

40 வயதிற்கு பின் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்

வாழ்க்கை பயணம் அனைவருக்கும் ஒரே சீராக அமைவதில்லை. சிலருக்கு ஆரம்ப கட்டம் எளிதாகவும், சிலருக்குத் தொடர் போராட்டங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். எவ்வளவுதான் அயர்வாது உழைத்தாலும் அதற்குரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்காமல் தவிப்பார்கள். ஆனால், ஜோதிடக் கணிப்புகளின்படி, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில ராசியினருக்கு வாழ்க்கைத் தராசு பாசிட்டிவ் திசையில் மாறத் தொடங்கும்.

குறிப்பாக, 40 வயதைக் கடக்கும் போது பலருக்குத் தடைகள் விலகி, பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியமாகிறது. இளமைக்கால அனுபவங்கள், பெற்ற முதிர்ச்சி மற்றும் கிரகங்களின் சாதகமான நகர்வுகள் ஆகியவை இவர்களைச் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஜோதிட அமைப்பில், 40 வயதுக்குப் பிறகே சனி மற்றும் குரு ஆகிய பிரதான கிரகங்களின் தாக்கம் வலுவடைகிறது. நற்கர்மங்களின் பலன்கள் கிடைக்கத் தொடங்கும் இந்த காலகட்டத்தில், 40 வயதுக்குப் பின் அதிர்ஷ்டமும் செல்வமும் தேடி வரப் போகும் 3 ராசிகள் பற்றி கீழே காண்போம்:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷப ராசியினர், ஆரம்ப காலத்தில் கடும் உழைப்பைச் சிந்தினாலும் அதற்கேற்ற முன்னேற்றத்தைக் காண்பது அரிது. இதனால் பலமுறை மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.

ஆனால், 40 வயதைத் தாண்டியதும் சுக்கிரனின் அருளோடு குருவின் பார்வையும் இணையும் போது தன யோகம் கூடிவரும். இதுவரை தாமதமான பலன்கள் அனைத்தும் மிகக் குறைந்த முயற்சியிலேயே இவர்களை வந்தடையும். சமுதாயத்தில் தனக்கென ஒரு கௌரவமான இடத்தையும், நிலையான செல்வத்தையும் இவர்கள் அடைவார்கள்.

Related Articles

Related image1
Astrology: செப்டம்பரில் 4 கிரகப் பெயர்ச்சி: 'ஜாக்பாட்' அடிக்கப்போகும் 7 ராசிகள்.. பணமழை!
Related image2
Astrology: மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட வாசல் திறக்குது..! 12 ராசிகளுக்கும் இன்று என்ன பலன்?
35
கன்னி
Image Credit : Pixabay

கன்னி

புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியினர், வாழ்வின் முற்பகுதியில் மற்றவர்களைச் சார்ந்து நிற்பதாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் பல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

ஆனால், 40 வயதுக்குப் பிறகு இவர்களிடம் உள்ள சுய திறமைகளும் தனித்துவமான புத்தி கூர்மையும் முழுமையாக வெளிப்படும். தனது சொந்த பலத்தைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவர். இதன் விளைவாக, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உயரங்களைத் தொட்டு, எதிர்பாராத நிதி வளர்ச்சியைப் பெறுவார்கள்.

45
மகரம்
Image Credit : Pixabay

மகரம்

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினர் இயல்பிலேயே கடும் உழைப்பாளிகள் மற்றும் கடமை தவறாதவர்கள். இளமைக் காலத்தில் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தடைகளும் தோல்விகளுமே மிஞ்சும். இருப்பினும், இவர்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடுவார்கள்.

40 வயதிற்குப் பின், இவர்களின் பொறுமைக்கும் உழைப்பிற்கும் சனி பகவான் முழுமையான நற்பலன்களை வழங்கத் தொடங்குவார். தொழில் விருத்தி, அசையாச் சொத்துக்கள் சேர்க்கை, அரசாங்க ரீதியிலான நன்மைகள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து என அனைத்து செல்வங்களையும் இவர்கள் அடைவார்கள்.

55
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினர், வாழ்க்கையின் முதல் பாதியில் பலவிதமான பின்னடைவுகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். எதிலும் தீவிரமாக உழைத்தாலும், உரிய பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

ஆனால், 40 வயதைக் கடந்ததும் இவர்களின் உள்ளுணர்வும், சூழ்நிலையைக் கையாளும் நிதானமும் அபாரமாக அதிகரிக்கும். கிரகங்களின் சாதகமான பார்வையால், இழந்த செல்வத்தையும் மரியாதையையும் வட்டி முதலுமாக மீட்டெடுப்பார்கள். சொந்த தொழில் மற்றும் முதலீடுகள் மூலம் அபரிமிதமான லாபத்தைக் குவிப்பார்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Moon Yoga: சுக்கிரன்-சந்திரன் யோகம்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.! ஜோதிடர்கள் கணிப்பு.!
Recommended image2
Daily Horoscope: திங்கட்கிழமை ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை இன்று யாருக்கு பணவரவு, வெற்றி கிடைக்கும்?
Recommended image3
Vastu Tips: செல்வம் பெருக செருப்பை எந்தத் திசையில் கழற்றி வைக்க வேண்டும்? வாஸ்து வழிகாட்டி இதோ!
Related Stories
Recommended image1
Astrology: செப்டம்பரில் 4 கிரகப் பெயர்ச்சி: 'ஜாக்பாட்' அடிக்கப்போகும் 7 ராசிகள்.. பணமழை!
Recommended image2
Astrology: மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட வாசல் திறக்குது..! 12 ராசிகளுக்கும் இன்று என்ன பலன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved