கேது தோஷம் உள்ளவர்கள் இதனை அணிந்தால்.. மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் மாறிடும்
வாழ்க்கையில் திடீர் பிரச்சினைகள் அதிகமா? காரணம் தெரியாம குழப்பமா இருக்கீங்களா? இதற்கு ஒரு ரகசிய தீர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய ரத்தினம். ஆனால் அதின் சக்தி பெரிய மாற்றம் செய்யுமாம். அது என்ன? யார் அணியலாம்? என்பதை பார்க்கலாம்.

கேது மகாதசை தீர்வு
ஜோதிடத்தில் கேது கிரகத்தின் பலவீனம் வாழ்க்கையில் திடீர் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘வைடூரியம்’ என்ற ரத்தினம் ஒரு சக்திவாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது. இது சாதாரண நகையாக அல்லாமல், அணிபவருக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. நிதி நிலைத்தன்மை, மன அமைதியை மேம்படுத்த உதவும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கேது மகாதசை அல்லது அந்தர்தசை காலத்தில் பலர் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
கேது தோஷ பரிகாரம்
இந்த நேரத்தில் வைடூரியம் அணிவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் என்றும், வாழ்க்கையில் நிலைத்தன்மையை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக நிதி இழப்புகளை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் இது உதவலாம். இந்த ரத்தினம் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பயம், பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அமைதியை வழங்கும்.
வைடூரியம் ரத்தின நன்மைகள்
மேலும் தியானம் அல்லது ஆன்மிக பயணத்தில் இருப்பவர்களுக்கு கவனம் அதிகரிக்க உதவும். உடல்நலம், சருமப் பிரச்சினைகள், மூட்டு வலி மற்றும் மன அழுத்தம் குறைவதற்கு இது உதவலாம் என நம்பப்படுகிறது. எவரும் இந்த ரத்தினத்தை அணிய முடியாது என்று அறிவுறுத்துகின்றனர். ஜாதக நிலையைப் பொருத்தே அணிய வேண்டும். கேது கிரகம் பலவீனமாக இருக்கும் ஜாதகங்களில், குறிப்பாக 1, 3, 4, 5, 9, 10ஆம் வீட்டில் இருப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும். மேலும் 7, 17, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பணவரவு தரும் ரத்தினம்
வைடூரியத்தை அணிவதில் சில விதிமுறைகள் உள்ளன. செவ்வாய் அல்லது சனிக்கிழமை நல்ல நேரத்தில், வெள்ளி அல்லது பஞ்சலோகம் மோதிரத்தில் பொருத்தி அணிவது சிறந்தது. ஆண்கள் வலது கையின் நடுவிரலில், பெண்கள் இடது கையின் நடுவிரலில் அணிய வேண்டும். எந்த ரத்தினத்தையும் அணியும்முன், நிபுணர் ஜோதிடரின் ஆலோசனை பெறுவது அவசியம். சரியான முறையில் அணிந்தால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரக்கூடிய சக்தி இந்த ரத்தினத்திற்கு உள்ளது.

