- Home
- Astrology
- பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் குரு - செவ்வாய் சேர்க்கை... 45 நாட்களுக்கு குபேர அருள் பெறப்போகும் 5 ராசிகள்
பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் குரு - செவ்வாய் சேர்க்கை... 45 நாட்களுக்கு குபேர அருள் பெறப்போகும் 5 ராசிகள்
Jupiter Mars Conjunction : குரு மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையால் ஒரு அரிய யோகம் உருவாகும். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிகளுக்கு குரு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்பதை பார்க்கலாம்.

Jupiter Mars Conjunction
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதிலும் குரு பகவானும், செவ்வாய் பகவானும் இணையும் காலம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. குரு அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை குறிக்கும் கிரகமாகவும், செவ்வாய் தைரியம், ஆற்றல், செயல் திறன் மற்றும் நில சொத்துகளின் காரகனாகவும் போற்றப்படுகிறார்.
செப்டம்பர் 19ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே அதே ராசியில் குரு பகவான் சஞ்சரித்து வருவதால், இந்த இரு கிரகங்களின் அரிய இணைவு உருவாகிறது. இந்த யோகம் அடுத்த ஒன்றரை மாத காலத்திற்கு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், வருமான உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான காலமாக அமையும். லக்னத்தில் குருவும் செவ்வாயும் இணைவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் சாதகமாக முடியும். தொழிலில் முன்னேற்றம், வேலை செய்யும் இடத்தில் பாராட்டு, சிலருக்கு பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் உருவாகலாம்.
பொருளாதார சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. உடல்நலமும் திருப்திகரமாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இருந்த பண நெருக்கடிகள் படிப்படியாக குறையலாம்.
சொத்து, வீடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வருவாய் வாய்ப்புகளும் உருவாகும். நீங்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும் காலமாக இது அமையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒன்றரை மாதம் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக இருந்த கடன்களை அடைக்க வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற நேரமாக அமையும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கலாம். மாணவர்களும் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் அருள் அதிகமாக இருக்கும் காலமாக இது அமையும். வருமானம் உயர்ந்து சேமிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வருவாய் வழிகள் உருவாகலாம்.
திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறைந்து அமைதி நிலவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் வலுப்பெற்று, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

