- Home
- Astrology
- Astrology : சந்திரன்-கேது சேர்க்கை... இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிமேல் அடி விழப்போகுது..!
Astrology : சந்திரன்-கேது சேர்க்கை... இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிமேல் அடி விழப்போகுது..!
Ketu Moon Conjuction : சந்திரன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் இந்தக் காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

Ketu Moon Conjuction
ஜோதிட கணிப்புகளின்படி, சந்திரன் ராசியை மாற்றிக் கொண்டு பயணிக்கிறது. இந்த மாற்றத்தின் போது மற்ற கிரகங்களுடன் ஏற்படும் சேர்க்கைகள், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சிலருக்கு இது முன்னேற்றத்தையும் நன்மைகளையும் தரக்கூடும்; மற்ற சிலருக்கு சவால்களையும் உருவாக்கலாம். மே 22ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறது. அங்கு ஏற்கனவே கேது இருப்பதால், சந்திரன்-கேது சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகிறது. இந்த யோகம் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது.

மீனம்
இந்த காலகட்டத்தில் மீன ராசியினர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கணவன்-மனைவி இடையே புரிதல் குறைபாடு ஏற்படலாம். கூட்டுத் தொழில் அல்லது கூட்டாண்மை தொடர்பான முடிவுகளை தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். பண விஷயங்களில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
சிம்மம்
சந்திரன்-கேது சேர்க்கை நேரடியாக சிம்ம ராசியிலேயே நடைபெறுவதால், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உயரும். ஆனால் அவசர முடிவுகள் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். பயணங்களில் கவனம் தேவை; வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். பேச்சில் கட்டுப்பாடு இல்லையெனில் நெருங்கியவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். புதிய முதலீடுகளைத் தவிர்த்து, சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
இந்த யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சோதனைக்காலமாக அமையலாம். சட்டம், வழக்கு அல்லது அதிகாரப்பூர்வ பிரச்சினைகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகள் அல்லது போட்டியாளர்கள் மூலம் மனஅழுத்தம் உருவாகலாம். உடல்நலத்தில் குறிப்பாக உணவு பழக்கத்தில் கவனம் தேவை. வெளியூர் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதய நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது பாதுகாப்பான முடிவாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சற்றே சவாலாக இருக்கலாம். முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைக்காமல் மனவருத்தம் ஏற்படலாம். நண்பர்கள் அல்லது நெருங்கியவர்கள் மூலம் ஏமாற்றம் ஏற்படும் சூழ்நிலை இருக்கலாம். தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடுபவர்கள் கடின உழைப்பின் மூலம் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் அமைதியை பேணுவது மிகவும் முக்கியம். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

