- Home
- Astrology
- Guru Peyarchi 2026 : புதிய சக்தியைப் பெறும் குரு பகவான்.! மார்ச் 11 முதல் இந்த 5 ராசிகளுக்கு பணமழை பொழியும்.!
Guru Peyarchi 2026 : புதிய சக்தியைப் பெறும் குரு பகவான்.! மார்ச் 11 முதல் இந்த 5 ராசிகளுக்கு பணமழை பொழியும்.!
Guru Peyarchi 2026 Palangal : ஜோதிடக் கணக்கீடுகளின்படி, மார்ச் 11, 2026 அன்று, குரு பகவான் தனது வக்ர நிலையை விட்டு நேராக நகரத் தொடங்குவார். குருவின் நேரடி சஞ்சாரம் எந்த ஐந்து ராசிகளுக்கு சுபமாக இருக்கும். அதுகுறித்து இங்கு காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நேரடி சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். நிதி நிலைமை மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நேரடி சஞ்சாரம் புதிய வருமான வழிகளை உருவாக்கும். பழைய முதலீடுகள் மூலம், குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய ஒப்பந்தத்தை இறுதி செய்யலாம். உறவுகளில் நல்லிணக்கம் மேம்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நேரடி சஞ்சாரம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மகத்தான வெற்றிகளைப் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறன் வலுப்பெறும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். பழைய கடன்கள் தீரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நேரடி சஞ்சாரம் பொன், பொருள் வசதிகளை அதிகரிக்கும். நிலம், கட்டிடம் அல்லது வாகனம் வாங்க சரியான நேரமாகும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு
தனுசு குரு பகவானின் சொந்த ராசி என்பதால், இந்த மாற்றம் அவர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இழுபறியில் இருந்த வேலைகள் வேகம் பெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய தொழில் தொடங்க இது சிறந்த நேரம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

