- Home
- Astrology
- Astrology: வெளியே பார்த்தா கோபக்காரங்க.. ஆனா பழகுனா தங்கம்! அன்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிகள்!
Astrology: வெளியே பார்த்தா கோபக்காரங்க.. ஆனா பழகுனா தங்கம்! அன்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிகள்!
Astrology: வெளியே முரட்டுத்தனமாகவும் கோபக்காரர்களாகவும் தெரிந்தாலும், உள்ளத்தில் அளவற்ற அன்பையும் பாசத்தையும் ஒளித்து வைத்திருக்கும் 4 ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அன்லிமிடெட் பாசம் காட்டும் 4 ராசிகள்
சில மனிதர்களை முதல்முறை பார்க்கும் போது மிகவும் கோபக்காரர்களாகவோ, முரட்டுத்தனமானவர்களாகவோ அல்லது யாரோடும் ஒட்டாமல் விலகி நிற்பவர்களாகவோ தோன்றும். ஆனால், அவர்களோடு பழகிப் பார்த்தால் மட்டுமே அவர்களின் கடினமான தோற்றத்திற்குப் பின்னால் அசைக்க முடியாத அன்பும் பாசமும் ஒளிந்திருக்கிறது என்பது தெரியும்.
இவர்களுக்கு மனதில் காதல் பொங்கி வழிந்தாலும், அதை அழகான வார்த்தைகளால் வெளிப்படுத்தத் தெரியாது. ரொமாண்டிக்காகப் பேசுவதை விட, பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவது மற்றும் கஷ்ட காலத்தில் கூடவே நிற்பதன் மூலமே தங்கள் அன்பை நிரூபிப்பார்கள். ஜோதிட ரீதியாக, குறிப்பிட்ட சில கிரகங்களின் ஆதிக்கமே இத்தகைய இயல்பை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட 'வெளிப்படைத்தன்மை இல்லாத, ஆனால் தங்கமான மனம் படைத்த' 4 ராசிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1.மகரம்
மகர ராசியை ஆட்சி செய்பவர் ஒழுக்கத்திற்கும் கடமைக்கும் அதிபதியான சனி பகவான். இதனால் இவர்களிடம் இயல்பாகவே ஒரு தீவிரத்தன்மையும், உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் தயக்கமும் இருக்கும்.
இவர்களிடம் "ஐ லவ் யூ" போன்ற இனிப்பான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது. இவர்களைப் பொறுத்தவரை, வார்த்தைகளை விட செயல்தான் முக்கியம்.
தன் துணைக்கோ அல்லது குடும்பத்திற்கோ ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது, நிதி சார்ந்த உதவிகளைச் செய்வது, தொழில் ரீதியாக உறுதுணையாக நிற்பது ஆகியவையே இவர்கள் காட்டும் அன்பு. வெறும் கவர்ச்சிகரமான பேச்சுகளை விட, நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளையே இவர்கள் உண்மையான காதலாகக் கருதுகிறார்கள்.
2.விருச்சிகம்
செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறக்கும் விருச்சிக ராசியினர், தங்கள் உணர்வுகளைப் பூட்டி வைக்கும் ரகசியப் பெட்டகம் போன்றவர்கள். வெளிப்புறத்திற்கு அமைதியாகவும், எதிலும் விலகியிருப்பது போலவும் காட்சி தருவார்கள்.
ஒருவரை முழுமையாக நம்பித் தன் இதயத்தில் இடம் கொடுப்பதற்கு இவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை தங்கள் அன்பை வெளியே காட்டவே மாட்டார்கள். இவர்களின் இந்த மௌனமும் கடுமையான பார்வையும்தான், மற்றவர்களை இவர்களைப் பற்றி 'ஆணவம் பிடித்தவர்கள்' அல்லது 'எப்போதும் கோபப்படுபவர்கள்' எனத் தவறாக எண்ண வைக்கிறது.
ஆனால், ஒருமுறை உங்களை நம்பிவிட்டால், இவர்களை விட உயிரைக் கொடுக்கும் அளவிற்கு அன்பு செலுத்துபவர்களைப் பார்க்க முடியாது.
3. கன்னி
புதன் கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும் கன்னி ராசியினர், எதையும் கச்சிதமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். முகத்திற்கு நேராகப் போலிப் புகழ்ச்சிகளையோ, இனிமையான வார்த்தைகளையோ பேச இவர்களுக்கு வராது.
மாறாக, நீங்கள் கவனிப்பாரற்று விட்டுவிட்ட சிறிய சிறிய விஷயங்களைக்கூட அக்கறையோடு செய்து முடிப்பார்கள். உங்கள் வாழ்க்கையைச் சீரமைக்கவும், உங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி உங்களை முன்னேற்றவும் இவர்கள் முயல்கிறார்கள் என்றால், அதுவே இவர்களின் அன்பின் அடையாளம். குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அவர்கள் காட்டும் தீவிர அக்கறையின் வடிவமே அது
4. ரிஷபம்
அன்பின் கிரகமான சுக்கிரன் அதிபதியாக இருந்தாலும், ரிஷபம் ஒரு நில ராசி என்பதால் இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மெதுவாகவே அடி எடுத்து வைப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பிடிவாத குணமும், கூச்ச சுபாவமும் இவர்களின் உள்ளே இருக்கும் ஆழமான பாசத்தை மறைத்துவிடும்.
கவிதைகள் மூலமாகவோ அல்லது அடுக்கு மொழிகளிலோ இவர்களால் அன்பைப் பொழிய முடியாது. ஆனால், எந்தச் சூழல் வந்தாலும் மாறாமல், உங்களோடு உறுதியாகத் துணை நிற்கும் ஒரு நம்பிக்கையான நபராகத் திகழ்வார்கள். இவர்களின் நிலையான ஆதரவே இவர்கள் வழங்கும் மிகப்பெரிய காதல் பரிசு.

