Asianet News TamilAsianet News Tamil

மனைவி தூக்கத்திலேயே துடிதுடிக்க வெட்டிப்படுகொலை.. பயத்தில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள கோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (27) , இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சசிகலா (25). இவர்களுக்கு யுவனேஷ் வயது (4) என்ற மகனும் மற்றும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Wife murdered on suspicion.. husband suicide in tiruvannamalai
Author
Thiruvannamalai, First Published Apr 16, 2022, 11:15 AM IST

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் வெட்டிக்கொலை செய்து விட்டு பயத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்ட சம்பவம் அப்பகுதியிலர் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவி மீது சந்தேகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள கோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (27) , இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சசிகலா (25). இவர்களுக்கு யுவனேஷ் வயது (4) என்ற மகனும் மற்றும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

அடிக்கடி தகராறு

இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு சசிகலா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அதிகாலையிலேயே ராமசாமி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது மனைவி சசிகலாவை தட்டி எழுப்பி நம்முடைய வீட்டிற்கு செல்லாம் என்று கூறியுள்ளார். ஆனால், சசிகலா வர மறுத்ததாக கூறப்படுகிறது. 

வெட்டிக்கொலை

இதனால், ஆத்திரமடைந்த ராமசாமிதான் மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து சசிகலாவின் கழுத்து, தலை, மற்றும் கை, கால் மற்றும் பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் அலறியதையடுத்து மாமியார்  ஞானாம்பாள் எழுந்த அவரையும் வெட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சசிகலாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை

இதனையடுத்து, போலீசுக்கு பயந்து ராமசாமி விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios