Asianet News TamilAsianet News Tamil

Vismaya case: நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

2020ம் ஆண்டு  ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Vismaya Dowry Death Case..Husband Kiran Kumar Guilty
Author
Kollam, First Published May 23, 2022, 12:11 PM IST

கேராளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா(24) வழக்கில் கணவர் கிரண்குமார் குற்றவாளி என கொல்லம் கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்மயா(24). ஆயுர்வேத மருத்துவத்தில் இறுதி ஆண்டு படித்து வந்த விஸ்மயா, கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ். கிரண் குமார் என்ற நபரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் இவர்களுக்கு இடையே திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண் மோசமாக தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

Vismaya Dowry Death Case..Husband Kiran Kumar Guilty

இந்நிலையில், 2020ம் ஆண்டு  ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது. 

Vismaya Dowry Death Case..Husband Kiran Kumar Guilty

இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றம்சாட்டினர். இந்நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கணவர் கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக குற்றம் நிரூபணமாகியுள்ளது. ஆகையால், விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் குற்றவாளி என  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios