மருமகளுடன் உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த மகன்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா ?
மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமனாரை கையும் களவுமாக பிடித்த மகனை மருமகளுடன் தீர்த்துக்கட்டி இருக்கிறார் தந்தை.
தகாத உறவு :
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின் தந்தை பல்வந்த் சிங்குக்கும் (வயது 64) தகாத உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனால் விக்ரம் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் பல்வந்த் சிங்கும், பூஜாவும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை விக்ரம் சிங் ஒரு நாள் இரவு கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது தனது தந்தையையும், மனைவியையும் அவர் கண்டித்துள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என மகன் விக்ரம் சிங்கை தந்தை பல்வந்த் சிங் கொன்றுள்ளார்.
மாமனார் - மருமகள் தீட்டிய திட்டம் :
பின்னர் விக்ரம் சிங்கே தனது உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் மின்விசிறியின் அவரது உடலை தொங்கவிட்டுள்ளனர். மறுநாள் காலை விக்ரம் உயிரை மாய்த்துக் கொண்டதாக குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே கூறி நாடகமாடி உள்ளனர். இதனை அடுத்து இறுதிச் சடங்குகளை செய்ய குடும்பத்தினர் விரைந்துள்ளனர்.
மேலும் படிக்க : உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு.. என் குடும்பத்தையே இப்படி பண்ணிட்டியே.. விபரீதத்தில் முடிந்த நட்பு !
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து விக்ரம் சிங்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது. . இதனை அடுத்து பூஜாவையும், அவரது மாமனார் பல்வந்த் சிங்கையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.