Asianet News TamilAsianet News Tamil

தம்பியுடன் தகாத உறவு.. கும்மாளம் போட்ட மனைவி.. கணவர் செய்தது என்ன தெரியுமா ?

சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான், யாஸ்மின் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

The brother who killed his brother who had an illicit relationship with his wife
Author
Tamilnadu, First Published Mar 13, 2022, 12:56 PM IST

கடந்த மார்ச் 10ஆம் தேதி காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து எழாததால், சந்தேகமடைந்த அவரது தாயார் மருத்துவரை அழைத்து பார்த்துள்ளார். மருத்துவரோ, யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, யாஸ்மினின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குடும்ப தகராறில்யாஸ்மின் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கணவர் அப்துல் ரகுமான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

The brother who killed his brother who had an illicit relationship with his wife

ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே இறந்திருப்பதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அதனடிப்படையில் யாஸ்மினின் கணவரான அப்துல் ரகுமானைப் பிடித்து காவல்துறையினர் கிறுக்குபிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது.

அதாவது யாஸ்மின் அப்துல் ரகுமானின் தம்பியுடன் பல மாதங்களாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அந்த தொடர்பை துண்டிக்குமாறு அப்துல் யாஸ்மினிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசிய நிலையில் தொடர்ந்து யாஸ்மின் அவரது தம்பியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

The brother who killed his brother who had an illicit relationship with his wife

இதனால் ஆத்திரத்தில் உறங்கச் சென்றபின் யாஸ்மினின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியதாக அப்துல் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios