Asianet News TamilAsianet News Tamil

ஆசைவார்த்தை கூறி ஆசைதீர அடிக்கடி உல்லாசம்.. அடுத்த நாளே வேறு பெண்ணுடன் எஸ்கேப்.. பிரபல துணிக்கடை உரிமையாளர்.!

மேனகாவும், முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும், முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்கு ஜவுளிக்கடையில் மேனேஜராக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த வினோத் என்பவரும் உதவியுள்ளார். 

sexual harassment case...sri ganapathy silks shop owner jail
Author
Theni, First Published Apr 23, 2022, 11:20 AM IST

திருமண செய்தவதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் ஆசைத்தீர உல்லாசமாக இருந்துவிட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து தலைமறைவாக இருந்த பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சரணடைந்துள்ளார். 

பிரபல துணிக்கடை

தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான கணபதி சில்க்ஸ். இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள கிளையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் மட்டுமல்லாது அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும்  செயல்பட்டு வருகின்றன. 

sexual harassment case...sri ganapathy silks shop owner jail

காதல்

இந்த கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தை பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டி யைச் சேர்ந்த சின்னகருப்பன் என்பவரது மகள் மேனகா (29) என்பவர் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடை உரிமையாளரான முருகனுக்கும் மேனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

அடிக்கடி உல்லாசம்

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மேனகாவும், முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும், முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்கு ஜவுளிக்கடையில் மேனேஜராக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த வினோத் என்பவரும் உதவியுள்ளார். வினோத் ஜவுளிக் கடையில் உள்ள சமயங்களில் மேனகாவும், முருகனும் பழனிசெட்டிபட்டியில் உள்ள வினோத்தின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான பிரசன்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தை மறைத்து மறுநாள் முருகன், மேனகாவுடன் பழனிசெட்டிபட்டியிலுள்ள மேனேஜர் வினோத்தின் வீட்டில்  உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில் மேனகாவிற்கு ஒரு போன் கால் வந்தது. அப்போது, முருகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி தகவல் கூறியுள்ளனர். மேலும் முருகன் பிரசன்னா நிச்சயதார்த்தம் தொடர்பான படத்தையும் மேனகாவின் செல்போனிற்கு அனுப்பியுள்ளார்.

sexual harassment case...sri ganapathy silks shop owner jail

ரகசிய திருமணம்

இதனால் ஆத்திரமடைந்த மேனகா முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக முருகன் மேனேஜர் வினோத்தை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு வினோத், முருகன், மேனகா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி வினோத்தின் முன்னிலையில், உத்தமபாளையம் ஞானம்மன் கோவிலில் முருகன் மேனகா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேனேஜர் வினோத் செய்துள்ளார். திருமணம் நடைபெற்ற மறுநாள் மேனகாவிற்கு போன் செய்த முருகன், நான் பிரசன்னாவை பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன். தான் பிரசன்னாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், உன்னுடன் நடைபெற்ற திருமணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. திருமணம் செல்லாது. பிரசன்னாவுடன் திருமணத்திற்குப் பின் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போகிறேன் என்று கூறிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

sexual harassment case...sri ganapathy silks shop owner jail

இதனால் அதிர்ச்சியடைந்த மேனகா கடந்த மார்ச் 14-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த முருகன் தலைமறைவானார். காவல்துறையினர் முருகனை தீவிரமாக தேடிவந்த நிலையில், முருகன் நேற்று மாலை காவல்துறையினரிடம் சரணடைந்தார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios