Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் பயங்கரம்.. லாரி ஏற்றி இருவர் படுகொலை.. ஓட்டுநர், கிளீனர் கைது..!

தனது லாரியை எடுக்க வடமாநில லாரி டிரைவரும், கிளீனரும் வந்துள்ளனர். லாரியை எடுக்கப் போகிறேன் வழிவிடுங்கள் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், வடமாநில லாரி டிரைவருக்கும், போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Chennai 2 people murder... truck driver, cleaner arrested
Author
Chennai, First Published Jun 2, 2022, 12:27 PM IST

செங்குன்றம் அருகே லாரி ஏற்றி கமலக்கண்ணன் (36), குமரன் (34) ஆகியோர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக உள்ள லாரி பார்க்கிங் பகுதியில் வடபெரும்பாக்கம் விநாயகபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (36), நவீன் (36), வடகரையை சேர்ந்த குமரன் (34) ஆகியோர் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த, தனது லாரியை எடுக்க வடமாநில லாரி டிரைவரும், கிளீனரும் வந்துள்ளனர். லாரியை எடுக்கப் போகிறேன் வழிவிடுங்கள் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், வடமாநில லாரி டிரைவருக்கும், போதையில் இருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Chennai 2 people murder... truck driver, cleaner arrested

அப்போது, டிரைவர் லாரியை திடீரென எடுத்துக் கொண்டு, போதையில் இருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளார். இதில், கமலக்கண்ணன், குமரன் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நவீன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Chennai 2 people murder... truck driver, cleaner arrested

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பேவாலீசார் இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு  செய்த போலீசார் தப்பியோடிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த  ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios