Asianet News TamilAsianet News Tamil

5ம் வகுப்பு சிறுமியை கூட விட்டு வைக்காத.. காமவெறி கொண்ட 50 வயது ஆசிரியர் - பரபரப்பு சம்பவம்

அருணாச்சல பிரதேசத்தில் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 50 வயது பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

50-year-old School Teacher, Arrested For Raping Students In Arunachal Pradesh-rag
Author
First Published Sep 4, 2023, 12:01 PM IST

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 50 வயது ஆசிரியர் பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் பற்றி தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

50-year-old School Teacher, Arrested For Raping Students In Arunachal Pradesh-rag

பெற்றோர் அளித்த எஃப்ஐஆர் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் முதல்வரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக, கீழ் சுபன்சிரி காவல் கண்காணிப்பாளர் கெனி பக்ரா கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் உள்ள குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!

50-year-old School Teacher, Arrested For Raping Students In Arunachal Pradesh-rag

போஸ்கோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். கடந்த ஆண்டு நவம்பரில், ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் விடுதி வார்டன், ஆறு சிறுவர்கள் மற்றும் 15 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios