Asianet News TamilAsianet News Tamil

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Job Vacancies at CISF and here the details how to apply
Author
First Published Oct 25, 2022, 6:44 PM IST

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 540 உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial) பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

  • உதவி துணைக் காவல் ஆய்வாளர்(Assistant – Sub Inspector) 
  • காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial)

கல்வித் தகுதி:

  • அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) : 5 லெவல் ஊதிய வரைவின் படி  ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • தலைமை காவலர் பதவிக்கு (Head Constable – Ministerial)  ஊதிய வரை 4வது வரைவின் படி, ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

  • உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
  • அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும்.
  • மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  
  • எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 25.10.2022
     
Follow Us:
Download App:
  • android
  • ios