எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) 3,588 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) 3,588 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப உள்ளது. நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. 3,406 பணியிடங்கள் ஆண்களுக்கும், 182 பணியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26, 2025 முதல் ஆகஸ்ட் 24, 2025 வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல்காரர், சலவைத் தொழிலாளி, முடி திருத்துபவர், துப்புரவுப் பணியாளர், தையல்காரர், பிளம்பர், பெயிண்டர் போன்ற தொழில்களில் ஐடிஐ சான்றிதழ் அல்லது பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆகஸ்ட் 24, 2025 அன்று விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்:

ஜெனரல், ஓபிசி மற்றும் ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

சம்பளம்:

சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை (லெவல்-3). மத்திய அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

தேர்வு முறை:

முதலில் உடல் தகுதித் தேர்வு (PET) மற்றும் உடல் அளவீட்டுத் தேர்வு (PST) நடைபெறும். பின்னர் 100 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதன் பிறகு தொழில் சார்ந்த தேர்வு நடைபெறும். இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

பிஎஸ்எஃப்-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான rectt.bsf.gov.in -ல் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக, படிவத்தின் நகலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.