பலரும் தனது ஓய்வு காலத்தில் மாதம் 1 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ற முதலீட்டு திட்டம் குறித்து காணலாம்.

Moneyeduschool நிறுவனர் அர்னவ் பாண்டியா, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற முதலீடுகள் மூலம் ஒரு நபர் மாதம் ரூ.1 லட்சம் எப்படி சம்பாதிக்க முடியும் என்பதை விளக்குகிறார். தி மனி ஷோவில் கவிதா தப்லியலிடம் பேசிய பாண்டியா, “முதலீட்டாளர்கள் ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கு ஈக்விட்டி ஒரு முக்கிய சொத்து ஆகும். ஏனெனில் அவர்களுக்கு இளம் வயதிலேயே அதிக கார்பஸை உருவாக்க இது தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நீங்கள் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஒரு வரம்பு உள்ளது.

40 வயதில் உழைத்து, சம்பாதித்து, சேமித்து வைக்கும் இந்த செயல்முறையை யாராவது நிறுத்தத் தயாராக இருந்தால், அவர்களது கார்பஸ் இன்னும் 40-50 ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டும். இருப்பினும், எதிர்பாராத செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவை உங்கள் திட்டத்தை சீர்குலைக்கும்.

40 வயதிற்குள் ஓய்வு பெறுவதற்கு ஒரு தனிநபரின் சிறந்த முதலீட்டுத் தொகை என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 1 லட்சம் கிடைக்க விரும்பினால், உங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.4 கோடி போர்ட்ஃபோலியோ தேவை.

உங்கள் பணத்தில் குறைந்தது 60 சதவிகிதம் ஈக்விட்டி சார்ந்த சொத்துகளாக இருக்க வேண்டும். 20 சதவிகிதம் கடனாகவும், மேலும் 10 சதவிகிதம் விலைமதிப்பற்ற உலோகங்களாகவும் இருக்க வேண்டும். மேலும் 10 சதவிகிதம் ரியல் எஸ்டேட்டில் இருந்து வேறு முதலீடுகளில் இருந்து வரலாம். 

இந்த வகையான போர்ட்ஃபோலியோவில் இருந்து, போர்ட்ஃபோலியோவில் தொடர்ந்து வளர்ச்சி இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம், திரும்பப் பெறுவது கார்பஸைக் குறைக்காது. மறுபுறம், 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு, மாதம் 12,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்” என்று விளக்கினார்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?