கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்க விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,536 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,514 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 36,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.60 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.