டெபிட், கிரெடிட் கார்டு இனி தேவைப்படாது...நிதி ஆயோக் சிஇஒ கருத்து ...
டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்கும் நம் மக்கள் தற்போது அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில், ஈடுபட தொடங்கியுள்ளனர் .
அதன்படி இனி வரும் காலங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு உண்டான தேவைகள் குறைந்து விடும் என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல் நிலவி வருகிறது என்றும் , மேலும் தேவையற்ற சட்டத்தை நீக்கி விட்டு , பல புதிய சட்ட திருத்தங்கள் இந்தியாவில் கொண்டுவந்துள்ளதால், இனி வரும் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி பன்மடங்காக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .
இதுவரை இந்தியாவில் தொழில் புரிவதற்கு தடையாக இருந்த 12௦௦ சட்டங்கள், நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் இந்தியாவை பொறுத்தவரை எரிசக்தி உணவு உற்பத்தி துறையில் கவனம் செலுத்தினால் நல்ல வளர்ச்சி காணும் என தெரிவித்தார் .