ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறும் பயனாளிகள், 12 ஆண்டுகளுக்கு முதல் கடன் தொகையான ரூ.8 லட்சத்தில் 4 சதவீத வட்டி மானியத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த 1 கோடி குடும்பங்களுக்கு அரசு மானியமாக ரூ.2.30 லட்சம் கோடி வழங்கப்படும். இந்த மானியம் பல்வேறு வழிகளில் வழங்கப்படும். அத்தகைய ஒரு முறை வட்டி மானியத் திட்டமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தத் திட்டத்தின் நோக்கம் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS)/குறைந்த வருமானம் கொண்ட குழு (LIG)/நடுத்தர வருமானக் குழு (MIG) குடும்பங்களை உள்ளடக்கியது. நாட்டில் எங்கும் சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் இவர்கள். அத்தகைய நபர்கள் PMAY-U 2.0 இன் கீழ் ஒரு வீட்டை வாங்க அல்லது கட்டுவதற்கு தகுதியுடையவர்கள்.

  • EWS: ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரை உள்ள குடும்பங்கள்.
  • LIG: ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை உள்ள குடும்பங்கள்.
  • MIG: ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை உள்ள குடும்பங்கள்.

EWS, LIG ​​மற்றும் MIG குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்கள் மானியமாக வழங்கப்படும். ₹35 லட்சம் மதிப்புள்ள வீட்டிற்கு ₹25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறும் பயனாளிகள் 12 ஆண்டுகளுக்கு முதல் கடன் தொகையான ₹8 லட்சத்தில் 4 சதவீத வட்டி மானியத்துக்குத் தகுதியுடையவர்கள். புஷ் பட்டன் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு 5 ஆண்டு தவணைகளில் ₹1.80 லட்சம் மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தங்கள் கணக்கு விவரங்களை இணையதளம், OTP அல்லது ஸ்மார்ட் கார்டு மூலம் சரிபார்க்கலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- நகர்ப்புற திட்டம் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இந்தத் திட்டத்தின் கீழ், 1.18 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 85.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, மீதமுள்ள வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம்?