கடைசி வாய்ப்பு....இன்னும் 14 நாட்கள் மட்டுமே...!
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார் . பின்னர் பல கட்டுபாடுகளுடன் கையில் உள்ள பணத்தை எல்லாம் வங்கி கணக்கில் செலுத்தபட்டது . ஆனால் அளவுக்கு மீறி பணம் வைத்துள்ளவர்கள் அதாவது கருப்பு பணம் என கூறப்படும் கணக்கில் வராத பணத்தை வைத்திருப்பவர்கள் இன்னமும் , பழைய ரூபாய் நோட்டுகளை ஆங்காங்கு வைத்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது .
இந்நிலையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக , பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது . அதன்படி வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் அல்லது வேறு எதாவது குறிப்பிட்ட நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள கணக்கில் காட்டப் படாத பணம் குறித்த தகவலை இம்மாதம் (மார்ச் 31) ஆம் தேதிக்கும் தெரிவிக்கலாம்.இல்லையென்றால் கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
அவ்வாறு கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 49.90% வரி, அபராத தொகை செலுத்த நேரிடும் .
மேலும் ,25% தொகையை கண்டிப்பாக டெபாசிட் செய்து , நான்கு ஆண்டு கால வடியில்லா இருப்பாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
வருமானத்தை எப்படி அறிவிக்கலாம் ?
http://incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் குறித்த தகவலை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது