“ரெய்டில் மாட்டினால் அவ்ளோ தான் “உச்சகட்ட வரியுடன், அபராதம் “.....!!!
“ரெய்டில் மாட்டினால் அவ்ளோ தான் “உச்சகட்ட வரியுடன், அபராதம் “.....!!!
கருப்பு பணம் வைத்திருப்பவர்களை, தற்போது வருமானவரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.அவ்வாறு ரெய்டு வரும் போது, அது கருப்பு பணம் என நிரூபிக்கபட்டால் , 137.25 %( 60 சதவீத வரி, 60 சதவீத அபராதம், 15 சதவீத கூடுதல் கட்டணம் வரி ) என , வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,
ரெய்டு வரும் போது, அந்த பணம் கணக்கில் காட்டபடாமல் இருந்தால், அதற்குண்டான வரியை செலுத்திய வேண்டும் என்றும், அதே சமயத்தில், ஒரு வேளை , அந்த பணம் கருப்பு பணம் தான் என ஒப்புக்கொண்டாலும் , அதற்கு 107.25 சதவீதம் வசூலிக்கப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மத்திய அரசு கருப்பு பணத்தை ஒப்படைக்க கால அவகாம் வழங்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் 17 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் , கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் (பழைய பணம்), தாமாகவே முன்வந்து ஒப்படைத்தால், 50 சதவீத அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பது மேலும் ஒரு கூடுதல் தகவல் .