Asianet News TamilAsianet News Tamil

மலிவு விலையில் மக்கள் மருந்தகங்கள்... அடித்து தூக்கிய நிர்மலா சீதாராமன்..!

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

Pharmacies at affordable prices... nirmala sitharaman
Author
Delhi, First Published Feb 1, 2020, 12:48 PM IST

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

முக்கிய அறிவிப்புகள்:- 

* 2025-ம் ஆண்டுக்குள் பால் உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்படும். 

* 2021-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

* சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

* ஆயுஷ்மான் திட்டத்தில் மேலும் 112 மாவட்டங்களில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மலிவு விலையில் மருந்து விற்க அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் துவக்கப்படும்.

* செயற்கை நுண்ணறிவு மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை

* மருத்துவ கல்லூரிகளை மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்க நடவடிக்கை

* பெரிய மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

*  ஏழை, எளிய மக்களுக்கான பயன்கள், மோடி ஆட்சியில் நேரிடையாக சென்றடைகின்றன.

* தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்படும்.

* மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்.

* ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்

* சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios