பிஎப் பிடிக்க எத்தனை பேர் வேண்டும்....???
பிஎப் பிடித்தம் பொறுத்தவரை சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
அதாவது, ஒரு நிறுவனத்தில் 20 பேர் இருந்தால் பிஎப் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு நிறுவனத்தில், 10 பேர் வேலை செய்தாலே பி.எப் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றும் பரிந்துரையை அமைச்சரவை தற்போது நிராகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பி.எப். பொறுத்தவரை, தொழிலாளர்கள் மட்டுமின்றி, பிஎப் மூலம் சிறு நிறுவனங்கள் பாதிக்க வாய்ப்பு இருப்பதையும் கவனத்தில் வைத்துகொண்டு, இது குறித்து, மீண்டும் மறு பரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
மேலும், எத்தனை பேர் இருந்தால் பி எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கபடுகிறது.
பங்குசந்தையை பொறுத்தவரையில், கடந்த செப்டம்பர் 30 வரை பிஎப் பணம் 9,148 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
