இன்றைய நிலையில், அனைவருமே ஏதாவது ஒரு வகையில் வங்கியில் கடன் பெறதான் செய்கிறோம். அதே போன்று, கிரடிட் கார்ட் பயன்பாடும் அதிகம் உள்ளது. எதை வாங்கினாலும் கிரடிட் கார்ட் மூலம் வாங்கும் பழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் கிரடிட் கார்டுகளுக்கு , குறிபிட்ட காலத்தில் அதற்குண்டான பணத்தை செலுத்தவில்லை என்றால், கிரடிட் ஸ்கோர் குறைந்து விடும். இதனால் மீண்டும் வங்கியில் இருந்து லோன் பெறுவது மிகவும் கடினமானது என்பது குறிபிடத்தக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கத்தான் , தற்போது அறிமுகமாகியுள்ளது CASH e என்னும் மொபைல் ஆப்

சிறப்பம்சம் :

பேஸ் புக் அக்கௌன்ட் மூலம் லாகின் பண்ணலாம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பணம் நம் அக்கௌன்ட்ல வரும் .

குறிப்பாக, நம்முடைய பேஸ்புக் புரபைல் பார்த்த பின், ஒரு நல்ல ஒபினியன் இருந்தால் மட்டுமே பணம் பெற முடியும்....

CASH e நிறுவனம் தொடங்கி , எட்டு மாதம் ஆன நிலையில், தற்போது , கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பட்டதாரிகளுக்கு மட்டும் கடன் வழங்கு கிறது.

CASH e நிறுவனம் மூலம், 15 – 90 நாட்கள் காலகெடுவில் பணம் வாங்கலாம் .

வட்டி விகிதம் 30 – 36 சதவீதம் வரை ..

இதுவரை 10,000 பேர் CASH e மூலம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ரொம்ப முக்கியம் :

பான் கார்டு, ஆதார் கார்ட் , பே ஸ்லிப், வங்கி அறிக்கை ......

இதன் மூலம் கடன் பெறும் அனைவரும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒன் கேபிடல் என்னும் NBFC நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது NBFC நிறுவனத்தின் தலைவர் தான் ரமணகுமார்...இவர்தான் NBFC நிறுவனத்தின் CASH e ஆப்ஸ்கு சொந்தக்காரர்.......என்பது குறிப்பிடத்தக்கது..