2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படும் : மத்திய அரசு அதிரடி ....!!!
2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் : மத்திய அரசு
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்பு, பல மாற்றங்களுக்கு நடுவே, புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு , ரொக்க பரிவர்த்தனைக்கு மெல்ல மெல்ல தடையை கொண்டு வர முயற்சிக்கிறது.
பணத்தட்டுப்பாடு :
டிஜிட்டல் பரிவர்த்தனையை பெரும்பாலானோர், பயன்படுத்தி வரும் போது, ரொக்கப்பரிவர்தனைக்கான பணத்தின் தேவை குறைந்து காணப்பட்டாலும் மக்கள் அதிகளவில் ரொக்க பரிவர்த்தனை யில் தான் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20,000 ஏ.டி.எம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் :
நாட்டில் 2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன, இன்னும் 20,000 ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.