மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

வோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது கார்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வோக்ஸ்வேகன் விலை உயர்வுக்குக் காரணம் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வரவிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்கள் என்று கூறப்படுகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் செலவு காரணமாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு, பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இந்தியாவின் வோக்ஸ்வேகனின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும். இந்த வரிசையில் போலோ, வென்டோ, டைகன், டிகுவான் மற்றும் புதிய செடான் விர்டஸ் ஆகியவை அடங்கும். வோக்ஸ்வேகன் தற்போது இந்தியாவில் உள்ள 117 நகரங்களில் 157 விற்பனை மையங்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. நாட்டின் பிற முக்கிய உற்பத்தியாளர்களும் தங்கள் வரிசைக்கான விலை உயர்வை அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ளனர். மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களின் விலை ஜனவரி முதல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இருப்பினும், விலை உயர்வு மாதிரிக்கு ஏற்ப மாறுபடும் என்று தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் கடுமையான ஒழுங்குமுறை தேவைகள் ஆகியவை விலை உயர்வுக்கு காரணம் என்றும் மாருதி கூறியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் தனது வாகனங்களின் விலையை வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களில் உயர்த்தவுள்ளது. இதன் விலை உயர்வும் ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி விலை உயர்வால், கார்களின் விலையில் நிச்சயமாக உயர்வு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியா, ஜனவரி 2023 முதல் விலைகளை உயர்த்துவதாகக் கூறியுள்ளது.

முழுவதுமாக விலை உயர்த்தாமல், பகுதி அளவே விலை உயரும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அல்ல. நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் நிறுவனமும் ஜனவரி முதல் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ