Asianet News TamilAsianet News Tamil

பித்ரு பக்ஷத்தின் போது தவறுதலாக கூட இதை வாங்காதீர்கள்.. முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்

பித்ரு பக்ஷத்தின் போது புதிய பொருட்களை வாங்குவது அசுபமானது என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இருப்பினும் சாஸ்திர நூல்களில் புதிய பொருட்கள் வாங்கக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை

Pitru paksha 2023 : Pitru paksha Don't even buy this by mistake during Pitru Paksha.. you will incur the wrath of your ancestors Rya
Author
First Published Sep 19, 2023, 11:56 AM IST

பித்ரு பக்ஷம் என்பது நம் முன்னோர்களை போற்றுவதற்கு உரிய காலமாகும். இந்த நேரத்தில் முன்னோர்கள் பூமிக்கு வருகை தருகிறார்கள் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு பக்‌ஷ காலத்தில் சந்ததியினர் தங்கள் முன்னோர்களை திருப்திப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பித்ரு பக்ஷம் தொடங்க உள்ளது. அக்டோபர் 14-ம் தேதி அன்று இந்த பித்ரு பக்ஷம் முடிவடைகிறது. இந்த 16 நாட்களிலும் தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்கள் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்கின்றனர்.

பித்ரு பக்ஷத்தின் போது புதிய பொருட்களை வாங்குவது அசுபமானது என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இருப்பினும் சாஸ்திர நூல்களில் புதிய பொருட்கள் வாங்கக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. பித்ரு பக்ஷத்தின் போது திருமணம், நிச்சயதார்த்தம், சர்வ சாதாரணமான சடங்குகள், உபநயன சடங்குகள் போன்ற சில சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பித்ரு பக்ஷத்தின் போது புதிய ஆடைகள் வாங்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு ஆடை தானம் செய்யப்படுவதால் புடிய ஆடை வாங்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. ஆடை மற்றும் உணவை தானம் செய்யும் இந்த செயல் முன்னோர்களை அமைதிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு செய்யத் தவறினால் முன்னோர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம், இது வாழ்க்கையில் பல்வேறு சவால்களுக்கு வழிவகுக்கும், அதாவது தொழில் பின்னடைவுகள், உடல்நலப் பிரச்சினைகள், நிதி சிக்கல்கள் மற்றும் குடும்பத்தைத் தொடங்குவதில் கூட சிரமங்கள் ஏற்படலாம்.

Vastu Tips : லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்க..இந்த 5 அசுப காரியங்களை இன்றே வீட்டிலிருந்து தூக்கி எறியுங்கள்

பித்ரு பக்ஷத்தின் போது முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்ட தானம் போன்ற சடங்குகளைச் செய்கின்றனர். இதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள். பித்ரு பக்ஷத்தின் போது இறைச்சி சாப்பிடக்கூடாது. மேலும் மது அருந்தக்கூடாது. இதனால் முன்னோர்களுக்கு கோபம் வரும். இது உங்கள் பரம்பரையை நேரடியாக பாதிக்கிறது. வீட்டில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பித்ரு பக்ஷத்தின் போது இரும்பு பொருட்களை வாங்கக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இது வீட்டில் உள்ள பாசிட்டிவ் எனர்ஜியை குறைத்து நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.

மறுபுறம், இந்த காலகட்டத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு இந்த சடங்குகளை செய்யவில்லை எனில் பித்ரு தோஷம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முன்னோர்கள் அமைதியற்ற ஆவிகள் அல்லது பேய்களாக மாறக்கூடும் என்று நம்பப்படுகிறது, அவர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் சந்ததியினருக்கு தொந்தரவை ஏற்படுத்தலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios