Today Rasi Palan : செப்டம்பர் 30, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறும். வேலையில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று அவசர முடிவுகளை தவிர்த்து விடுங்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். அலைச்சல் அல்லது சோர்வு ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. சட்ட சிக்கல்கள் அல்லது வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிதி நிலைமை:

இன்று அதிகமான செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடனை திருப்பி செலுத்துவது சவாலாக இருக்கலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாகும். எதிர்பாராத வீட்டுச் செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் வரக்கூடும். பங்குச்சந்தை அல்லது வணிகம் போன்ற முதலீடுகளில் கவனம் தேவை. நிதானித்து முடிவெடுங்கள். இன்று சேமிப்பு குறையலாம். நிதி தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் நீடிக்கக் கூடும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் இன்று நிம்மதி நிலவும். ஆனால் சிறு சிறு சவால்களை தீர்ப்பதற்கு முயற்சி தேவை. வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். அவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவைப்படும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் சங்கடங்கள் அல்லது அலைச்சல்கள் ஏற்படக்கூடும். காதல் உறவுகள் சாதகமாக இருக்கும்.

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசியின் அதிபதியான சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது. 
  • கருப்பு எள், வெல்லம் போன்றவற்றை கோயிலில் காணிக்கையாக செலுத்தலாம். 
  • ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்யலாம். 
  • “ஓம் சனீஸ்வராய நமஹ” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது மன நிம்மதியைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.